Category: சிறுகதை

வருகை

கொல்லைக்கதவின் நாதாங்கி கொக்கியை எடுத்து ஆணியில் தொங்கவிடும்போது விசாலாட்சியின் கைவிரல்கள் லேசாக உதறல் எடுத்தன. முகம் கைகால்களை கழுவிக்கொண்டு போய்விடலாமா என்ற எண்ணம் தோன்றியது. கதவை இழுத்து மூடும்போது இதென்ன இப்படிப்படுத்துகிறது என்ற அச்சத்தையும் கொடுத்தது. களவைக்காணும் ஆர்வம் பின்னின்று தள்ளுவதை தடுத்து நிறுத்தவும் முடியவில்லை. தானும் ஒரு கள்ளத்தனத்தில் இறங்குவதுபோல தோன்ற செண்பகச் செடிபக்கம்…

யாருக்காகவும் பூக்காத பூ

வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து செல்லும் போதே ரூபன் “டேய், இந்த வாரம் கிளாஸ் இல்ல… நேத்தைக்குத்தான் தாஸ் அங்கிள் வந்து வீட்டுல சொல்லிட்டுப் போனாரு… சொல்ல மறந்துட்டேன்” என்றான்.  “அப்ப அந்த வெள்ளைக்காரன் வர்ரான்னு சொன்னாரு” எனக் கேட்டேன். “அவுனுங்க இன்னும் வரலை, அடுத்த வாரம்தான் வருவாங்களாம்” என மிதிவண்டியை உருட்டிக் கொண்டே…

பச்சைக் கண்களுடன் ஒரு கறுப்புப் பூனை

இந்தத் தொகுப்பில் பூனையைப் பற்றிய ஒரு கதையும் இல்லையே என்று  ஷீயிங் சொன்னபோது, எதிரே அமர்ந்திருந்த அவள் முகத்தில் எங்காவது சிரிப்பு ஒளிந்திருக்கிறதாக என்று  கூர்ந்து பார்த்தாள் அனா. வழக்கத்திற்கு மாறாக அதிகாரியின் தோரணைதான் தெரிந்தது. “குழந்தைப் பிறப்பு குறைவாக இருக்கும் நாட்டில் பூனைகள் அதிகமாக இருக்கும் என்று  ஓர் ஆய்வில் படித்த நினைவுள்ளது. நாய்களைவிட…

பெட்டகம்

மொத்தம் நான்கு லாக்கர்கள் அந்த வேனில் இருந்தன. அதில் இரண்டு லாக்கர்கள் ஐந்தரை அடி உயரத்தில் கம்பீரமாக இருந்தன. இளம் பச்சை நிறத்திலிருந்த  லாக்கர் நாலடி உயரம் இருந்தது.  சாயம்போன அலுமினிய நிறத்தில் இருந்த மற்றொன்று, மூன்று அடி உயரத்தில் மத்த பெட்டகங்களுக்கு மத்தியில் குட்டித் தம்பியாக பதுங்கி அமர்ந்திருந்தது. காணூர் பங்களாவின் இருட்டான அறைகளில்,…

வீட்டு நாற்காலி

“மொதல்ல பாப்பாவ எங்க அம்மா வீட்ல இருந்து கூட்டிட்டு வந்துருறேன். இந்த வீட்ல என்கிட்ட பேச ஆளே இல்ல” என்று அவள் என்னைப் பார்க்காமல் என் நாற்காலியில் அமர்ந்துகொண்டு ஜாடை பேசினாள்.  நான் முகத்தை இறுக வைத்துக்கொண்டு அலமாரியில் தேடிக்கொண்டிருந்தேன். “ஏங்க ஏதாவது பேசுவீங்களா இல்ல இனி இப்படித்தானா?” என்று கேட்டவளைத் தாண்டி ஏதும் சொல்லாமல்…

ராம மந்திரம்

“இல்லி ஆஞ்சநேயர் கோயில் சாரி தேவாலயா எல்லிட்டு” அந்த ஆட்டோக்காரரிடம் கேட்டபோது என்னுடைய கன்னடம் நிச்சயம் அவரை எரிச்சல் படுத்தியிருக்கலாம். “பரவால்ல தமில்லையே கேளு. ஆஞ்சநேயர் அதோ ஓரமா நிக்காரு பாரு. வேணும்னா போய் கும்பிட்டுக்கோ. அடுத்த வாட்டி நீ கேட்டா அவரும் இங்க இருக்க மாட்டாரு” பேசிக் கொண்டே வாயில் கொஞ்சம் புகையிலையைத் திணித்துக்…

தீர்வை

“தீர்வை கணக்க நாங்க இங்க தீர்மானிக்கிறதே வஸ்தாரி வரிசை வச்சி தான்” என்றார் ஊர்க்காடு ஜமீன் கோட்டியப்பத் தேவர். அவர் கைப்பிடிக் கொண்ட மர நாற்காலியில் பெருமிதத்துடன் அமர்ந்திருந்தார். அவரது இடது கை மீசையை நீவிக் கொண்டிருக்க, வலது கை ஜமீனுக்கான கோலை தாங்கி நின்றது.   அவர் சொல்லி முடித்ததும் தாமஸ் துரை பின்னால்…

1992

1 ஜீவானந்தம் பஸ்ஸை விட்டு இறங்கிய போது அவனை கடந்து சென்ற ரிக் வண்டி அவனுக்கு அப்பாவை ஞாபகப்படுத்தியது. வீடு சென்றால் அவரை எதிர்கொள்ள வேண்டும் என்று நினைக்கும்போதே கசந்தது. பையை தோளில் போட்டுக்கொண்டு நடக்கும் போது ஏதேதோ கலவையான எண்ணங்கள். தங்கை; அப்பா; பணம்; தோட்டம்; கல்யாணம் என்று உதிரிக் காட்சிகள். இன்னும் ஒரு…

அந்தம்

நிலவின் வெம்மையில் அசையாமல் குளிர்காயும் இருட்டு யானையைப்போல நின்றிருந்தது அக்குன்று. அதன் அடிவாரம் மெழுகுதிரி, எண்ணெய் மற்றும் லாந்தர் விளக்குகளின் வெளிச்சத்தில் மஞ்சள் கரைகட்டியிருந்தது. அக்குன்றுக்கு அருகிலிருந்த நிலத்தில்தான் மனித எலும்புகளைச் சமீபத்தில் தோண்டி எடுத்திருந்தார்கள். அக்குன்றினை நோக்கிச் செல்லும் பாதையின் இருமருங்கிலும் சின்னஞ்சிறு கொடிகள் ஊன்றப்பட்டிருந்தன. பாதையைவிட்டு விலகியிருந்த மரங்கள் தமக்கு அடியில் லாந்தர்…

அசைவும் பெருக்கும்

தவறான இடத்தை வந்தடைத்திருக்கிறோமோ என்ற ஐயம் மனத்தை நெருட, வெளிப்படும் சொற்கள் அதைக்காட்டிவிடுமோ என்ற தயக்கத்தில் அமைதியாக நின்றிருந்தான் கௌதம். “எத்தனை நாட்கள் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாய்?” என்றார் எதிரிலிருந்தவர். “இரண்டு ஆண்டுகளாக… ஆனால் பயிற்சியை விட்டுவிட்டுத்தான் செய்ய முடிந்தது. சில சமயம் மூன்று மாதங்கள்கூட இடைவெளி எடுத்ததுண்டு. ஆனால் எவ்வளவு தொடர்ந்து செய்தும் பலன் என்று…

ஊர்த்துவ தாண்டவம்

“சிவனோட அடிமுடியும்ம்ம்…அடிமுடியும்…” இராமசுப்பு பாட்டாவின் குரல் தனித்த சுருதியில் மேல் எழுந்தது. ஒரு மூலையில் சிறிய தும்மல் போல் எழுந்து மெல்ல மெல்ல காட்டை நிரப்பிச் செல்லும் சிம்மத்தின் குரல் அவை. என் அளவாச்சியை 1 அதற்கேற்றார் போல் இசைத்து பக்கப்பாட்டு பாட சிரமமாக இருந்தது. பின் பாட்டை நிறுத்திவிட்டு, அளவாச்சியை அவர் சுருதியோடு இணைக்க…

சாயம்

“இவ்வளவு கடை ஏறி இறங்கியாச்சு, இதுகள் ஒண்டிலையும் இல்லாததையோ இனிப் போற கடையில பாக்கப் போறம்…?”  உமாராணி அலுத்துப் போய்ச் சொன்னாள். “அது அப்பிடித்தான். வாழ்க்கையில ஒரே ஒருக்கா எனக்கு நடக்கப்போற கொன்வேகேஷனுக்கு என்ரை அம்மாவுக்கு நான் அப்பிடித்தான் உடுப்பு எடுத்துத் தருவன்”   “அப்ப, இதோட உம்மட படிப்பு முடிஞ்சுதாமோ…? வேறை படிப்பும் கொன்வேகேஷனும் இல்லையாமோ…?”…

சிருஷ்டியுலகம்

மெல்லிய பூஞ்சை வெயில் படர்ந்திருந்த முறாவோடையின் நீர்ப்பரப்பிலிருந்து பொட்டுப் பூச்சிகள் தாவித் தாவி ஓடும் நீரதிர்வுகளை, வண்டுகளின் இறக்கை பட்டு இலை மூடிய தொட்டாச்சுருங்கி பூக்களை, மாடு முறித்த எருக்கிலைச் செடியிலிருந்து சொட்டும் பாலை ஆயிஷா பார்த்தபடி இருந்தாள். இருளாகும் சமிக்ஞை போல அலங்கார தெருவிளக்கின் கண்ணாடி மூடிச்சிமிழிலிருந்து மூஞ்சூறு போல வெளிச்சங்கள் இடைவெளி விட்டு…

அனல் அவித்தல்

“கட்டத்தாத்தா எங்க போய்த்தொலைஞ்சாரு? தண்ணியமத்தலுக்கு நேரங்காணாதா?” அடர்நீலநிறக் கட்டங்கள் கொண்ட லுங்கியை ஏத்திக் கட்டியவாறு தன்ராஜ் கேட்டான். சட்டையணியாத அகல உடம்பின் ஓரத்தில் துண்டு தொங்கிக்கொண்டிருந்தது. அருகிலிருந்த பெஞ்சில் எதுவும் பேசாமல் பாஸ்கரண்ணாச்சி அமர்ந்திருந்தார். கருத்த எருமைத்தோல் போன்ற கைகள் இரண்டும் மரவிளிம்பைப் பிடித்திருந்தன. இடது கையில் வழக்கமாக அணியும்  தங்கப்பூச்சு கொண்ட கடிகாரமும் விரல்களில்…

மரணக்குழி

1 உறக்கத்தின் நடுவே போரோலத்தின் கதறல் கேட்டு விழிப்பு தட்டியது. இமைகள் இரண்டும் ஒட்டிக், கண்கள் திறக்க மறுத்தன. குழிக்குள் நான்கைந்து நாட்களாக உட்கார்ந்துக் கொண்டே தூங்கியதால் வந்த அயர்ச்சி. கண்களை நன்றாகத் திறந்தபோது மொத்த காடும் இருளால் சூழ்ந்திருந்தது. மூக்கின் முதல் சுவாச உணர்வு வந்ததும் மழை நீரில் பட்டு அழுகிய உணவின் வாடை…