
கொல்லைக்கதவின் நாதாங்கி கொக்கியை எடுத்து ஆணியில் தொங்கவிடும்போது விசாலாட்சியின் கைவிரல்கள் லேசாக உதறல் எடுத்தன. முகம் கைகால்களை கழுவிக்கொண்டு போய்விடலாமா என்ற எண்ணம் தோன்றியது. கதவை இழுத்து மூடும்போது இதென்ன இப்படிப்படுத்துகிறது என்ற அச்சத்தையும் கொடுத்தது. களவைக்காணும் ஆர்வம் பின்னின்று தள்ளுவதை தடுத்து நிறுத்தவும் முடியவில்லை. தானும் ஒரு கள்ளத்தனத்தில் இறங்குவதுபோல தோன்ற செண்பகச் செடிபக்கம்…