
அருண்மொழி அவர்களை முதலில் நான் சந்தித்தது ஊட்டி முகாமில்தான். சந்தித்தேன் எனச் சொல்வதைவிட அவரது ஆளுமையை தொலைவில் நின்றபடி வியந்து ரசித்துக்கொண்டிருந்தேன் என்பதுதான் உண்மை. தனது கருத்துகளை அவர் வலுவாகப் பதிவு செய்யும் விதம் ஆச்சரியமாக இருந்தது. அதற்குப் பின்னால் அவருக்கு இருக்கும் வாசிப்புப் பின்புலத்தை முகாம் முடிவதற்குள்ளாகவே அறிந்துகொண்டேன். தொடர்ந்து கெடாவில் நடந்த ‘பேய்ச்சி’…












