அ.பாண்டியனின் ‘அவரவர் வெளி’ நூல் வெளியீடு
அ.பாண்டியன் குறுநாவல் வெளியீடு
அ.ரெங்கசாமியின் குறுநாவல் வெளியீடு
செல்வன் காசிலிங்கம் குறுநாவல் வெளியீடு
நூலாசிரியர்களுடன் கலந்துரையாடல்
எழுத்தாளர் உமா கதிர் உரை
எழுத்தாளர் பவா செல்லதுரை – சிறப்புரை
எழுத்தாளர் சு.வேணுகோபால் – சிறப்புரை
கலை இலக்கிய விழா 10

இவ்வருடம் வல்லினத்தின் கலை இலக்கிய விழாவுக்கான ஏற்பாடுகள் மிக உற்சாகமாக தொடங்கப்பட்டுள்ளது. ஏழு நூல்களுடன் நான்கு ஆளுமைகளின் ஆவணப்படமும் இம்முறை கலை இலக்கிய விழாவில் வெளியீடு காண்கின்றன. எழுத்தாளர்கள் சு.வேணுகோபால் மற்றும் பவா செல்லதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ளும் ‘கலை இலக்கிய விழா 10’ மலேசியத் தமிழ் நவீன இலக்கியத்துக்கான மேலும் ஒரு படிக்கல்லாகத்…
மா.சண்முகசிவா சிறுகதைகள்: எஞ்சி இருக்கும் மானுடம்

மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் மா.சண்முகசிவாவின் இடம் 1980களின் இறுதியில் வலுவாக உருவானது. 1950களில் மலேசியா வந்த கு.அழகிரிசாமி இந்நாட்டில் அதுவரை இருந்த சிறுகதைப் போக்கின் உரத்த குரலையும் கருத்துப் பிரதிநிதிகளின் உரையாடல்களையும் விமர்சித்ததிலிருந்து மொழியின் கலை வடிவத்துக்கான முதல் விமர்சனக் குரலை இம்மண்ணில் பதிவு செய்தார் என எடுத்துக்கொண்டால் அதன் நீட்சியாக 1980களில்…
“அடிப்படையில் எல்லா கதைகளுமே புறத்தின் வழியாக அகத்தைக் காட்டுபவை”

மருத்துவர் மா.சண்முகசிவா மலேசியத் தமிழ் இலக்கியத்தில் எல்லோராலும் அறியப்பட்டவர். மலேசியாவில் நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி. 1987 – இல் ‘அகம்’ எனும் இயக்கத்தைத் தோற்றுவித்து அதன் மூலமாக படைப்பிலக்கியங்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். மலேசிய இலக்கியத்தின் தரமும் படைப்பாளர்கள் தரமும் உயர வேண்டும் எனும் எதிர்பார்ப்பு இவரிடத்தில் மேலோங்கி இருந்தது. இவருடைய தொடர் முயற்சி இன்றைய…
முன்னுரை: விமர்சனம் என்பது வாசக உரிமை

இலக்கிய படைப்புகள் இருவழி தொடர்புள்ளவை. எழுத்தாளனின் உள்ளத்தில் இருந்து விரியும் கற்பனையும் அனுபவமும் வாசகனுக்கு மெய்நிகர் வாழ்க்கை அனுபவமாகிறது. இலக்கிய பிரதியின் வழியே படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் இடையில் அந்தரங்க உரையாடல் நிகழ்கிறது. அந்த உரையாடலின் வழி வாசகன், எழுத்தாளன் காட்டும் அனுபங்களை மென்மேலும் விரித்துக் கொள்ள முடிகிறது. படைப்பிலிருந்து பெரும் அனுபவங்களும் திறப்புகளும் வாசகனின் வாழ்க்கை…
“எல்லா துறைகளிலும் விமர்சனம் தேவையாகிறது”

மலேசிய நவீன தமிழ் இலக்கியத்தில் தீவிரத் தன்மையுடன் இயங்கி வருபவர் எழுத்தாளர் அ.பாண்டியன். இடைநிலைப்பள்ளியின் ஆசிரியரான அ.பாண்டியன் வல்லினம் இதழின் பொறுப்பாசிரியரும் கூட. வல்லினம் அகப்பக்கத்தில் தொடர்ந்து பல முக்கியமான கட்டுரைகளை எழுதி வருபவர். இவர் எழுதிய பெரும்பாலான கட்டுரைகள் விமர்சனத் தன்மையைக் கொண்டவை. அவரது முதல் நூலான ‘அவர்களின் பேனாவிலிருந்து கொஞ்சம் மை’ தேசிய…
“மலேசியாவில் பெண்ணியம் சார்ந்த தமிழ் சினிமாவை நான் பார்த்ததில்லை.”

வல்லினம் ஆசிரியர் குழுவில் ஒருவரான இரா.சரவணதீர்த்தா ஆரம்பக் காலக்கட்டத்தில் கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தவர். நாட்டின் தமிழ்ப் பத்திரிக்கைகளில் நிருபராக பணியாற்றியவர். தொடர்ந்து வல்லினம் மேற்கொண்டு வரும் கலை, இலக்கியம், சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகளில் தீவிரத் தன்மையுடன் செயல்பட்டு கொண்டிருப்பவர். இவரது உலக சினிமா குறித்த கட்டுரைகள் வல்லினத்தில் தொடராக வெளி வந்தவை. அவை பலராலும் விரும்பி…
முன்னுரை: கலையின் ஒளிக்குரல்

வல்லினத்தில் தொடர்ந்து வெளிவந்த உலக சினிமா பற்றிய கட்டுரைகள் ‘ஊதா நிறத் தேவதைகள்’ எனும் தலைப்பில் நூல் வடிவம் பெற்றுள்ளது. இவை சினிமாவை விமர்சித்துப் பேசும் கட்டுரைகள் அல்ல. சினிமாவின் நுட்பம் பற்றியோ கலைவடிவம் பற்றியோ அதன் ஒளிமொழி குறித்தோ எனக்கு எதுவும் தெரியாது. நான் திரைக்கதைக்குள் ஒளிந்துள்ள மானுடத்தைக் கவனிப்பவன். அவ்வகையில் இந்தக் கட்டுரைகள்…
வாளாக மாறும் அளவுகோல்

மலேசியாவில் பன்னெடுங்காலமாக இலக்கியத்தில் இயங்கிகொண்டிருக்கும் தமிழ் எழுத்தாளர்களிடையே சுயத்தணிக்கை மனப்பான்மை அதிகம் இருப்பதை நூலகராக நான் பல தருணங்களில் அவதானித்ததுண்டு. பெரும்பாலும் குடும்பம், தோட்டம், பாலியம், காமம் என மிகச்சுருங்கிய களங்களில் அவர்கள் சிறுகதைகள் உருவாவதைப் பார்த்துள்ளேன். அதிகாரத்துக்கு எதிராகவோ அரசியல் ஒடுக்குமுறைகளின் எதிர்ப்புக்குரலாகவோ இனரீதியான பாராபட்சங்களுக்கு எதிர்வினையாகவோ இல்லாமல் தங்கள் மனதுக்குள் இருக்கும் ஒரு…