Category: சிறுகதை

டோன் கனவில் கண்ட இல்லறம்

தனக்கு ஒரு குடும்பம் இருப்பதைத் தான் கனவில் கண்டதாக டோன் என்னிடம் சொன்னபோது, என் கவனம் கீழே உள்ள பிரதான சாலையில் வரிசையாய் நின்றிருந்த வாகனங்களின் மீது படிந்தது. உண்மையில் சாலையின் ஓர நெரிசலில் அவசர அவசரமாகச் சென்ற பாதசாரிகள் மீதுதான் என் கவனம் அதிகம் ஈர்க்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலோர் அலுவலக உடையில் இருந்தனர். கருமேகத்…

பனிக்குடில்

இறைச்சி பொட்டலத்தை இறுக மூடியிருந்த பனிக்கட்டிகளை மர்சுகி கவனக்குறைவாக உடைத்ததனால் அவன் வீட்டிலிருந்த சிறிய குளிர்சாதனப் பெட்டி பழுதடைந்துவிட்டது. அவனது மனைவி அலுவலகத்திலிருந்து திரும்பும் வரை, மர்சுகி அப்பழுதைப் பற்றி அவளிடம் எதுவும் சொல்லவில்லை. ஒரு கையில் சுத்தியலையும் மறு கையில் பழத்தோல் சீவும் கத்தியையும் பிடித்தவாறு அக்குளிர்சாதனப் பெட்டியின்முன் மல்லாந்து படுத்துக்கிடந்தான். அவனது பார்வை…

அப்பா  தற்கொலை செய்து இறந்தார்

கடைசியில் அப்பா தற்கொலை செய்து இறந்துவிட்டார். அதிகாலை தொழுகை நேரத்தில், குளிர்ந்து விறைத்துப் போன அப்பாவின் உடல் வரவேற்பறையில் கிடந்ததாக அம்மா சொன்னார்.  அப்பா இயற்கையான இருதயக் கோளாறாலோ உயர் இரத்த அழுத்தத் தாக்குதலாலோ உயிரிழந்திருக்க சாத்தியமே இல்லை. ஏனென்றால் அப்பா எப்போதும்  ஆரோக்கியமாகத்தான் இருந்தார். மருத்துவர்களும் அதை உறுதிப்படுத்தியதாக அம்மா தின்னமாகக் கூறினார். “உங்களுடைய…

பெண்களின் நாட்டியம்

“ஒருவேளை நான் சிறைப்படுத்தப்பட்டாலோ அல்லது தோக் ஜங்கூட் போல  மெர்டேக்கா திடலில் தூக்கிலிடப்பட்டாலோ, நான் அவளை மிகவும் நேசிப்பதாக என் அம்மாவிடம் சொல்லிவிடனும் தெரியுமா.” மாவார் சிரித்துக் கொண்டே என்னைப் பார்த்து ஒருவாறு கண் சிமிட்டினாள். அவளால் இந்தச் சூழலையும் இவ்வளவு இயல்பாக எடுத்துக் கொள்ள முடிந்தது. கிறுக்கு குணம் கொண்ட பெண்.  அங்கு இருந்தவர்களின்…

மூன்று பெண்களின் உரையாடல்

மனம் வெறித்துக் கிடக்கிறது, ஆன்மாவும் சூன்யமாகிப் போயிருக்கிறது, உடல் தளர்ந்து சரிகிறது. தளர்வு என்பது சரியான விளக்கம் அல்ல, இது உண்மையில் அதையும் கடந்தது. இந்த இடத்தில் காலெடுத்து வைப்பேன் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை.  சபிக்கப்பட்ட இந்த இடத்தை வேலை முடிந்து திரும்பும் வழியில் பல சமயம் கவனிக்காமல் கடந்திருக்கிறேன். வாழ்வின் இந்தக் கரும்புள்ளியை நான்…

பேங்கோ

“விண்மீன்களே உங்கள் ஒளியை ஒளித்து வையுங்கள். அவை எனது ஆழத்து இருண்ட இச்சைகளின் மீது ஒளிபாய்ச்சாமல் இருக்கட்டும்” இருள் மண்டியிருந்த மேடையில் முகத்தில் வட்ட மின் விளக்கின் ஒளி விழ, நீல நிழல் தரையில் படர, மெக்பெத் தனித்து தனது மன குரளுக்குச் செவி சாய்த்தபடி நின்றிருந்தான்.  நாடகம் தொடங்கி ஏழெட்டு நிமிடங்கள் ஆகியிருக்கலாம். என்னையும்…

சுழலும் ஆழி

குளிர் காதுகளை அடைத்தது. இன்னும் சூரியன் வெளிச்சம் காட்டவில்லை. பேருந்து மெதுவாக பச்சை மலை குன்றுகள் சிதறிக்கிடக்கும் பாதையில் நகர்ந்து கொண்டிருந்தது. மரவட்டை நகர்வது மாதிரி நிலம் மெதுமெதுவாக மேடேறும் பாதை. ஒக்கரை குன்றடி சிற்பக்கூடங்களில் உளிகளின் சத்தங்கள் கலைந்து கேட்கிறது. “ஒக்கரை வந்துருச்சு…” என்று நடத்துனர் உறங்குபவர்களை எழுப்பினார். அருகில் உறங்கிக்கொண்டிருந்த பிரதிக்ஷாவை சேலை…

நச்சுப்புன்னகை

விழித்ததிலிருந்து வரிசைக் கிரமம் குலையாமல் அனைத்தும் நடந்திருந்தபோதிலும் அவற்றின் கூட்டுத்தொகையென எஞ்சிய உணர்வில் புதுமை சாயம் அப்பிக்கிடப்பதை உணர்ந்தான் முருகேசன். எதிர்புறம் இருந்த கண்ணாடியில் முகம் பார்த்துவிட்டு மீண்டும் சாலையைப் பார்த்தபோது என்றைக்கும் இல்லாத அளவிற்கு எழில் நாடி மேய்ந்தன விழிகள். கதகதப்பூட்டும் வண்ணங்களையும், பரபரத்தோடும் மக்களிடம் வெளிப்பட்ட உயிர்ப்பையும் கவனித்தபோது புறங்கழுத்தில் துவங்கி அடிமுதுகுவரை…

பெருமுலை

இரவு விமானத்தில் அமர்ந்தவாறு உறங்க முயன்றதனால் இடையும், தோள்களும் இறுகி வலியெடுத்தன. குதிகால்களில் நின்றவாறு இடது காலை மடித்து வலது காலையும், கைகளையும் நீட்டி சோம்பல் முறித்து கொட்டாவி விடுகையில் அவள் பெயர் ஒலிக்கக் கேட்டு திரும்பி அலாஸ்கா விமானத்தின் அலுவலகத்தை நோக்கிச் சென்றாள். “பை வந்துவிட்டதா?” என்றபடி அருகே சென்று நின்றாள். மங்கலான விளக்கு…

பழம்பாறை (அறிவியல் சிறுகதை)

( 1 ) கவனி, என் குரலைக் கவனி. என் குரல் என்பது உண்மையில் குரல் அல்ல, அது இன்னொன்று. ஒரு மூளை இன்னொரு மூளையை தொடர்பு கொள்வதற்கான எல்லா வழிமுறைகளிலும் இதை அறியமுடியும். ஒரு மூளையின் மிகச்சிறந்த அல்லது மிக இயல்பான வழிமுறை எதுவோ அதன் வழியாக இது தன்னை தொடர்புறுத்தத் தொடங்கும். இதை…

மெய்போலுமே மெய்போலுமே

2019-இல் நான் வல்லினத்தில் ‘தையும் பொய்யும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன். பிறகு 2021-இல் மலேசிய தமிழ்ச்சூழலில் நடந்த சில அதீத செயல்பாடுகள் காரணமாக அக்கட்டுரையை மீள் பார்வைக்குக் கொண்டுவந்தேன். அக்கட்டுரையின் மைய கருத்து, பொதுவாக தைப்புத்தாண்டு எனும் கருத்தைப் பரப்பும் தரப்பினர் தங்கள் முதன்மை ஆதாரமாக முன்வைக்கும் ‘மறைமலையடிகளின் தலைமையில் 1921ஆம் ஆண்டு,…

ஜார்ஜ்புஷ்ஷும் வட்டப்பேரும்

வாசலுக்குள் நுழைந்து அரசமரத்தைக் கடந்து செல்ல, கிளையில் இருந்து குதித்து வந்து மண்டைஓடு கூவினான், “லேய் வாத்து, நேத்து ஏம்பில வரல?”  “ஊர்ல இல்லல. நேத்துதான் வந்தேன்”, என் பதிலை அவன் கவனித்ததாக தெரியவில்லை.  “ஏறிச்சாடி விளாட வாரியா?”, மண்டைஓடு புதிதாக ஒரு விளையாட்டை கண்டுபிடித்துவிட்ட உற்சாகத்தில் இருந்தான்.  அவன் கண்கள் இரண்டும் விரிந்து வட்டமாக,…

தி. அலியாஸ் தைப்பின் உதடுகள்

எங்கள் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்துக்கு அந்த அழைப்பு திடீரெனதான் வந்தது எனலாம். “பிரபல கவிஞர் தி. அலியாஸ் தைப்பின் உதடுகளை விளம்பரப்படுத்தலாமென்று இருக்கிறேன்.” எங்கள் அலுவலகத்தில் ஒருவருக்குக் கூட தி. அலியாஸ் தைப் யாரெனத் தெரிந்திருக்கவில்லை. மேலும், அவரைத் தெரிந்து வைத்திருப்பது ஒரு தொலைப்பேசி எண்கள் அடைவு நிறுவனத்திற்கு அவ்வளவு முக்கிய பணியுமில்லை. விளம்பரம் தொடர்பான தகவல்களைச்…

பாவமன்னிப்பு

“சென்று வாருங்கள் திருப்பலி நிறைவேறிற்று” என்று பாதிரியார் தாமஸ், பிராத்தனையில் கூடியிருந்த மக்களைப் பார்த்துச் சொல்ல, இறைவனுக்கு நன்றி கூறி மணலில் அமர்ந்திருந்த மக்கள் எழுந்தனர். கடற்கரை காற்றில் பறந்த அவரவர் ஆடைகளைக் கவனமாகப் பிடித்தபடி கலைந்து சென்றனர். கூட்டத்தில் இருந்த தேநீர் கடைக்காரர், “சாமி!” என்று தாமஸை நோக்கிக் கத்தினார். ஆலயத்திற்குள் செல்ல எத்தனித்த…

குரோதம்

சீடேக் நீண்ட காலமாகப் பொறுமையாக இருந்துவிட்டான். ஏழு ஆண்டுகளுக்கும் மேலாகவே பொறுமை காக்கவும், கோபத்தை அடக்கவும், பழிவாங்கும் எண்ணம் எழாமல் இருக்கவும் தன்னைத் தானே பழக்கிக்கொண்டிருந்தான். ஆனால் இன்று அவன் தனக்குள் எழுப்பியிருந்த அந்தத் தடுப்புச் சுவரில் கசிவு ஏற்படும் நிலை நெருங்கிக்கொண்டிருந்தது. அவனுக்குள் கொந்தளித்த வெறுப்பு – நீண்ட காலமாக அழுகி, சீழ்படிந்த வெறுப்பு…