50ஆம் ஆண்டு பொன்விழா காணும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் வீழ்ச்சிக்கான காரணம்: ஓர் ஆய்வுக்கு முன்பான ஆயத்தங்கள்!

கட்டுரைக்குச் செல்லும் முன் வல்லினம் இணையதளத்தில் எழுத்தாளர் சங்கம் தொடர்பாக வெளிவந்த சில எழுத்தாளர்களின் கருத்துகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளதை வாசியுங்கள். பணம், புகழ், சொத்து, சுகம் அனைத்திலும் உயர்ந்து நிர்க்கும் வைரமுத்து அவர்களின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நூலை இங்கே அறிமுகம் செய்துவைத்து இலட்சக் கணக்கில் பணம் திரட்டிக் கொடுத்தது அவசியம்தானா? – இலக்கியக்குரிசில்  மா.இராமையா மலேசிய தமிழ்…

நினைவு நல்லது வேண்டும் சிறுகதை தொகுதிக்கான இரசனைக் குறிப்பு

ஜீவநதியின் 28 ஆவது வெளியீடாக மலர்ந்திருக்கிறது ப. விஷ்ணுவர்த்தினி எழுதிய நினைவு நல்லது வேண்டும் என்ற சிறுகதைத் தொகுதி. 93 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்நூலில் 12 சிறுகதைகள் இதில் உள்ளடங்கியிருக்கின்றன. அருள் திரு இராசேந்திரம் ஸ்ரலின் அவர்களின் வாழ்த்துச் செய்தியோடு, வி. ஜீவகுமாரனின் முன்னுரையும் இத்தொகுதியை அலங்கரிக்கின்றன எனலாம். இது நூலாசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுதியாகும்.…

புறப்பாட்டின் துயரப்பாடு

பயணச்சீட்டு முன்பதிவு செய்யப்பட்டது பணியிடத்தில் விடுப்பு சொல்லியாகிவிட்டது துணிமணி இத்யாதிகளையும் எடுத்துவைத்தாயிற்று புறப்படும் பொழுதில் எந்த முகாந்தரமுமின்றி மனதைப் பிசைகிறது ஒருசோகம்   ஒரு பிரயாணத்திற்குத் தயாராகிப் புறப்படும் வேளைகளில் பெருஞ்சோகச்சுமை நெஞ்சை அழுத்துகிறது புறப்படும் ஊர் சொந்த ஊராகவே இருந்ததில்லை பெரும்பாலும் சேரும் ஊர்கூட தூரதேசப் பிரதேசத்தில் இல்லை இரவு கிளம்பினால் விடியலில் அடைந்துவிடும்…

கோடைகால மதியப் பொழுதுகள்

மதியம் உறங்கி எழுந்தால் பெரும்பாரத்தொடு  மனம் கனத்துவிடுகிறது.   விடுமுறை நாளில் வெறிச்சோடி நீண்டுகிடக்கிறது வீதி. கதவுஜன்னல் சாத்திய வீடு படுத்துக்கிடக்கும் தெருநாய் நகராது நிற்கும் வாகனம் என அசைவற்றது எதைக்கண்டாலும் கூடிவிடுகிறது விசனம்.   கிளைகள் அசையக் குலுங்குகிறது பட்டுபோய்விட்ட மரம். ஏதொயிரு கிளைகள் நடுவே குடியிருந்ததற்கு சாட்சியாய் கட்டிய கூட்டை விட்டுப்போன பறவை…

போர்வைக்குள்

மேற்புறத்து மேடுபள்ளங்களைக் கொண்டு யூகிக்கமுடியவில்லை. கட்டில்மீது குவிந்துகிடக்கும் போர்வைக்குள் பதுங்கியிருக்கிறது ஏதோ ஒரு ஜந்து.   விளிம்புதாண்டியும் நீண்டிருக்கின்றன கால்கள். நகங்களில்லை. போர்வையின் நுனிபற்றி உயர்த்திப் பிடிக்கிறேன். கால்களை உள்ளிழுத்துக்கொள்கிறது.   கரம் நுழைத்துத் துழாவியும் அகப்படவில்லை.கடிக்கவுமில்லை. இன்னமும் உயர்த்துகிறேன். உள்ளோடி ஒளிந்துகொள்கிறது.   சரிதான்.வெளிச்சம்கண்டு பயப்படுகிறது போலும். விளக்கை அணைத்தால் வெளிவரக்கூடும்.   சுவிட்சைத்…

கலை இலக்கிய விழாவை தொடர்ந்து செப்டம்பர் முழுக்க வல்லினத்தின் தொடர் இலக்கிய நிகழ்வுகள்

வல்லினம் குழுவினரால் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் ‘கலை இலக்கிய விழா’வின் உற்சாகம் இவ்வருடமும் தொடங்கிவிட்டது. வழக்கமான நூல் வெளியீடுகளோடு செப்டம்பர் மாதம் முழுக்கவே இலக்கிய கலந்துரையாடல்களாக நிகழ்த்த இவ்வருடம் வல்லினம் திட்டமிட்டுள்ளது. வல்லினம் பட்டறை ‘செம்பருத்தி’ இதழ் ஆதரவுடன் ‘வல்லினம்’ தொடர்ச்சியாக நடத்திவரும் பட்டறையுடன் இவ்வருட கலை இலக்கிய  விழா தொடங்குகிறது. பேராசிரியர் அ. மார்க்ஸ்…

இழப்பு

படுத்தபடியே வயிற்றில் ஒருமுறை பந்தை வைத்து பார்த்தபோது சில்லென இருந்தது. அதிகாலை குளிர்  உடலைச் சிலிர்க்க வைத்தது. அணிந்திருந்த சட்டையைக் கொண்டு வயிறோடு ஒட்டியபடி இருந்த பந்தை மூடி கண்ணாடியில் பார்த்தேன்.  அம்மாவின் வயிறும் இரண்டு மாதங்களுக்கு முன்புவரை இப்படித்தான் இருந்தது. ஆனால் அவள் அப்போதெல்லாம் என்னைப்போல சுறுசுறுப்பாக இல்லை. அவசரத்துக்கு எழ மாட்டாள். தரையில்…

மாலதி மைத்ரி பதில்கள்

பகுதி 1 கேள்வி: அன்பின் மாலதி, ஓர் எழுத்தாளர் தன் படைப்பைப் பிரசுரிக்க இதழ்களைத் தேர்ந்தெடுக்கவேண்டுமா? நீங்கள் எல்லா இதழ்களிலும் எழுதுவதுண்டா? அதற்கான தேர்வு உண்டா?  –வரன், கனடா. பதில்: நான் என்னுடைய படைப்புகளைப் பிரசுரிக்க இதழ்களை மிகக்கவனமாகத் தேர்வு செய்தே அனுப்புகிறேன். இங்குபெரும்பான்மையான சிற்றிதழ்கள், இடைநிலை இதழ்கள் மற்றும் மின்னிதழ்கள் புரவலர்களின் ஆதரவால், அரசியல்வாதிகளின் ஆதரவால்,கறுப்புப்பணத்தைக் கொண்டோ,தொண்டு நிறுவன…

சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் போலியான இலக்கிய புரிதல்களை என் கதைகள் உடைக்கும்

செப்டம்பர் 15 ஆம் திகதி நடக்கவிருக்கின்ற கலை இலக்கிய விழா 5 ல் மூன்று இளம் எழுத்தாளர்களின் நூல்கள் வெளியீடு காணவிருக்கின்றன. மலேசிய சிறுகதை உலகில் முக்கிய ஆளுமையாக இருக்கும் கே.பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவு’ எனும் நூல் அதில் ஒன்று. எழுத்தாளர் கே.பாலமுருகன் தனது அந்த நூலைப்பற்றி கருத்துகளைப் பகிர்ந்தார். கேள்வி : உங்களுடைய தனி அடையாளமே…

கவிதைகள் இறுக்கமான சூழ்நிலையிலிருந்து கொஞ்ச காலம் விடுபடச் செய்திருக்கிறது!

செப்டம்பர் 15 ஆம் திகதி நடக்கவிருக்கின்ற கலை இலக்கிய விழா 5 ல் மூன்று இளம் எழுத்தாளர்களின் நூல்கள் வெளியீடு காணவிருக்கின்றன. பூங்குழலி வீரன் அவர்களின்  ‘நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்’ எனும் கவிதை தொகுப்பும் அதில் ஒன்று. அவருடனான சந்திப்பு… கேள்வி: வல்லினம் வெளியீடாக வரவிருக்கும் உங்கள் கவிதை நூல் பற்றி அறிமுகம் செய்யுங்கள். வல்லினம்…

தீவிரமான ஒரு வாசிப்பு தளத்தை நோக்கி சக வாசகர்களை நகர்த்தும் முயற்சியே என் கட்டுரைகள்

செப்டம்பர் 15 ஆம் திகதி நடக்கவிருக்கின்ற கலை இலக்கிய விழா 5 ல் மூன்று இளம் எழுத்தாளர்களின் நூல்கள் வெளியீடு காணவிருக்கின்றன. மலேசிய மற்றும் தமிழக நாவல்கள் தொடர்பான மனப்பதிவுகளை முன்வைத்து ம.நவீன் எழுதியுள்ள ‘விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு’ எனும் நூல் அதில் ஒன்று. எழுத்தாளர் ம. நவீன் தனது அந்த நூலைப்பற்றி கருத்துகளைப் பகிர்ந்தார். கேள்வி…

கே.பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள்’ (சிறுகதைத் தொகுப்பு)

இந்நாட்டின் புதிய தலைமுறை எழுத்தாளர்களில் பரவலான கவனத்திற்குட்பட்ட படைப்பாளி கே. பாலமுருகன். கெடா மாநிலத்தைச் சேர்ந்த இவர் படைப்புகள் பல, உலக தமிழ் வாசகர்களின் வரவேற்பை பெற்றுள்ளன. உள்நாட்டில் பல இலக்கிய போட்டிகளில் அவரது படைப்புகள் வாகை சூடியுள்ளன. அஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவனமும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் இவரது…

வார்த்தைகளுக்குள் உலகைப் பூட்டி வைத்தவள்- கவிஞர் பூங்குழலியின் நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும் – ஒரு பார்வை

கவிஞர் பூங்குழலி மலேசியத் தேசிய பல்கலைக்கழகத்தின் ஆண்டு கவிதை போட்டியின் வழியே எனக்கு முதலில் அறிமுகம் ஆனார். 2007ஆம் ஆண்டு நடந்த அப்போட்டியில் பூங்குழலியின் 7 கவிதைகள் பரிசுக்குரியதாகத் தேர்வுப் பெற்று முதல் மூன்று இடங்களையும் அவரே பெற்றிருந்தார். நான் அறிந்தவரை அதுதான் மலேசிய இலக்கியப் போட்டிகளில் முதன்முறையாக நிகழ்ந்த மிகப்பெரிய சாதனையாகும். ஆனாலும், கவிஞர்…

நாவல்கள் குறித்த பகிர்வில் ஒரு புதிய பரிணாமம் – ம. நவீனின் விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு

வல்லினம் பதிப்பகத்தின் புதிய வெளியீடாக ம. நவீனின் விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு எனும் கட்டுரைகளின் தொகுப்பு வெளிவரவிருக்கிறது. இந்நூலின் முன்னுரையில் நவீன் பதிவு செய்திருக்கும் கருத்துடன் இக்கட்டுரையைத் தொடங்குவது இத்தொகுப்பு குறித்து சிறந்த அறிமுகத்தினை வாசகர்களுக்கு வழங்கும். “வாசிப்பின் புரிதல் ஒவ்வொரு கட்டத்திலும் மாறுவதுபோல் வாசிக்கும் நோக்கமும் வாசிப்பை எதிர்கொள்ளும் விதமும் அறிவின் முதிர்ச்சிக்கு…

துரத்தியடிக்கப்பட்டவர்களின் கதை

வல்லினம் வெளியீடாக வெளிவரவிருக்கும் கே பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள்’ சிறுகதை தொகுப்பின் முன்னுரை “தோட்டங்களிலிருந்து தப்பி வந்த துரத்தியடிக்கப்பட்ட தமிழர்கள் சிறுநகரங்களிலும் பெருநகரங்களிலும் இன்னமும் தங்களுக்கான இடங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.” ‘எழுத்தாளனின் முடிவுகள் தயக்கத்திலிருந்தும் சந்தேகத்திலிருந்துதான் உருவாகின்றன’. என்னுடைய எல்லாம் கதைகளிலும் தீர்வுகளும் முடிவுகளும் சொல்லப்படவில்லையென்றாலும், நான் சேகரித்து வைத்திருந்த ஒரு வாழ்க்கையின்…

நிகழ்வது நிமித்தமாக

வல்லினம் வெளியீடாக வெளிவரவிருக்கும் பூங்குழலி வீரனின் ‘நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்’ எனும் கவிதை தொகுப்பின் முன்னுரை கவிதை எனப்படுவது நிகழ்தல்; நிகழ்தல் வழி பிறக்கும் பதிவுகள். நிழல்படங்களைப் போல்தான் கவிதையும். ஒரு நினைவிற்காக பத்திரப்படுத்தி வைக்கும் நிழல்படங்களில் நம்மை மட்டும் பார்க்கின்றோம். கவிதைகளில் நம்மையும் நாம் உணர்ந்தவற்றையும் பார்க்கிறோம். என்னைக் கடந்த போன காலத்தைத்தான் நான் என்…

விருந்தாளிகளின் வாழ்வு

வல்லினம் வெளியீடாக வெளிவரவிருக்கும்  ம.நவீன் எழுதியுள்ள ‘விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு’ எனும் கட்டுரை தொகுப்பின் முன்னுரை உன்ன‌த‌மான‌ ஒரு நிக‌ழ்வு என்ற‌ த‌த்துவ‌த்தோடெல்லாம் வாசிப்பு என‌க்கு அறிமுக‌மாக‌வில்லை. மொழியின் சுவையே நான் புத்த‌க‌ங்க‌ளைத் தேடிப்போக‌க் கார‌ண‌மாக‌ இருந்த‌து. அதிர்ஷ்ட‌ வ‌ச‌மாக‌ என‌க்கு லுனாஸில் இருந்த‌ புத்த‌க‌க் க‌டையிலேயே வேலை கிடைக்க‌ சாண்டில்ய‌ன், க‌ல்கி, அகில‌ன், நா.பார்த்த‌சார‌தி, மு.வ‌ர‌த‌ராச‌ன்,…

எலி பொறியில் எழுத்தாளர் சங்கம்

பூனை கழுத்தில் மணி கட்டுவது யார் ஏன் ஓடி ஒளியவா? நூறு எலிகள் பூனையின் கழுத்தை கடித்துக் குதறுவோம்… – காசி ஆனந்தன் படித்ததும் கொஞ்சம் பதட்டம் வந்தது. யோசிக்கத் தோன்றியது. நேரம் எடுக்க நினைத்தேன். பதட்டம் குறைந்தது. இப்போது எழுத தொடங்குகிறேன். பதட்டமின்றி எழுதுகிறேன். ஆனால், ஒரு மாத கால இடைவேளிவிட்டு பதில் எழுதுவதற்கு…

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திடீர் முடிவு – ஒரு தனி நபர் தாக்குதல்

தினக்குரல் நாளிதழில் (15.8.2013) மலேசிய எழுத்தாளர் சங்க சார்பாக அதன் செயலாளர் திரு. குணநாதன் வெளியிட்டிருக்கும் அறிக்கையை கண்ணுற்றேன். பலரும் அச்செய்தியை வாசித்து வருத்தமுற்றிருக்கலாம். தனிப்பட்ட முறையில் தயாஜிமேல் ஆத்திரமும் பட்டிருக்கலாம். இச்செய்தி பற்றி எனது கருத்தைக் கூறுவதற்கு முன் அதன் சாராம்சத்தை விளங்கிக் கொள்ளுதல் நலம். 1. எழுத்தாளர் சங்கம் ஆண்டுதோறும் நடத்தும் காலாண்டு…

ஒரு மசாலா அறிக்கைக்கு பதில்

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆண்டு சிறுகதை தேர்வு நிறுத்தப்படுகிறது என்ற எழுத்தாளர் சங்க செயலாளர் குணநாதனின் அறிக்கையைப் படிக்க நேர்ந்தது. சுரண்டலுக்குப் பின்பான எல்லாவித பாதுகாப்பு அம்சங்களைவிடவும் கழிவிரக்கத்தைத் தேடிக்கொள்வது பொதுவாகவே நடப்பில் உள்ள தப்பிக்கும் சூழல்தான். எழுத்தாளர் சங்கம், குணநாதன் மூலம் அதை மீண்டும் நிரூபித்துள்ளது. நான் ஆசிரியராக இருந்து வழிநடத்தும் வல்லினம்.கோம்…

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இலக்கிய மோசடி!

கடந்த 15.08.2013 ஆம் நாள் மக்கள் ஓசையில் வெளிவந்த மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அறியாமைகள், இயலாமைகள் குறித்த அதன் செயலாளர் ஆ. குணநாதனின் அறிக்கையைப் படித்தோம். இத்தனைநாள் எழுத்தாளர்களின் காப்பிரைட் சட்டத்திட்டங்கள் குறித்து அறியாமல் இருந்தது சங்கத்தின் மிகப்பெரிய குற்றமாகும். 5 ஆண்டுகளாக வருடாந்திர சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுப்பு போடும் செயல்பாட்டில் தன்னை ஈடுப்படுத்தி வந்த…