Category: கட்டுரை

செல்சி நீலம் – சீன மனம் பேசும் கதைகள்

“மொழிபெயர்ப்பு இல்லையெனில், நான் என் சொந்த நூற்றாண்டின் எல்லைக்குள் மட்டுப்படுத்தப்பட்டு இருப்பேன்” என கண்டாலே கால்வினோ கூறியதுதான் செல்சி நீலம் புத்தகத்தைப் படித்து முடித்த பிறகு எனக்குத் தோன்றிய முதல் சிந்தனை‌. வெளிநாட்டவர்களிடம் மலேசியாவின் கவர்ந்திழுக்கக் கூடிய பண்புகளை விவரிக்கச் சொன்னால், மூவின மக்களின் உணவும், கலாச்சார பாரம்பரியங்களும் அதில் முக்கிய காரணியாக அமையும். சூழல்…

அரணென்றானவள்

1 2023ல் நித்யவனத்தில் நிகழ்ந்த குரு நித்யா காவிய முகாமில் நீலி இதழாசிரியரும், எழுத்தாளருமான ரம்யாவுக்குப் பெண்ணெழுத்து சார்ந்து ஓர்  அமர்விருந்தது. அதில் ரம்யாவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி “நீங்கள் பெண்ணெழுத்தை முதன்மையாக வைத்து பத்திரிகை தொடங்கியிருக்கிறீர்கள், அதற்கு ‘நீலி’ என்ற ரத்தம் குடித்துக் கொல்லும் நாட்டார் தெய்வத்தின் பெயரை வைக்க காரணம் என்ன?” என்பதாக…

பி. எம். மூர்த்திக்கு வல்லினம் விருது

பி. எம். மூர்த்திக்கு வல்லினம் விருது 2025க்கான வல்லினம் விருது பி. எம். மூர்த்தி அவர்களுக்கு வழங்கப்படுகிறது.  மலேசியக் கல்விச் சூழலில் தமிழிலக்கியப் பாடம் நிலைத்திருப்பதற்கும் அதில் மலேசிய நாவல் இடம்பெறுவதற்கும் வித்திட்டவர் பி. எம். மூர்த்தி. ஆரம்பப்பள்ளி அடைவுநிலை தேர்வுத்தாள் வடிவத்தை முழுமையாக மாற்றியமைத்து அதில் படைப்பிலக்கியம் எனும் புதிய பகுதியை உருவாக்கியவர்.   படைப்பிலக்கியப்…

கடுவெளி காந்தள்

“ஆன்மிகம் என்பது ஆதி தெய்வம் அல்லவோ, அது கோருவது மானுட பலி. ஒரு வண்டி நிறைய புல் கட்டுகளைத் தின்று, ஒரு செம்பு பால் மட்டும் கறக்கும் பசு போன்றது அது. இங்கே அறிவதை விட, அறிந்ததை விடுவதே அதிகம்.” சுவாமி பிரம்மானந்தரின் வரிகள். ‘வந்தவழி’ எனும் நூலில், முன்னுரையாக எழுதியது. அதை வாசித்த காலங்களில்…

தாளம் தவறிய நாள் – ஜாகிர் ஹுசைன்

19.12.2024, சான் பிரான்சிஸ்கோவில் நுரையீரல் சிக்கலால் (Idiopathic Pulmonary Fibrosis) பாதிக்கப்பட்டிருந்த உஸ்தாத் ஜாகிர் ஹுசைன், தனது 73வது வயதில் இறந்தார் என்ற செய்தியை இணையத்தில் படித்ததும், மனம் கனத்தது. யாரிடமாவது இந்தக் கடும் செய்தியைப் பகிர்ந்தால், கண்களில் வரும் கண்ணீரை வார்த்தைகளாக மாற்றிவிடலாம். தொலைப்பேசியை எடுத்து, திரையில் விரலைத் தேய்த்தபோதுதான் தெரிந்தது அதிகாலை மணி…

இலக்கியத்தில் சிக்கலான தன்மை ஏன் உருவாகிறது?

தீவிர இலக்கியத்தின் தொடக்கநிலை வாசகர்கள் உணரும் சிக்கல்தன்மை என்பது எழுத்தாளர் வேண்டுமென்றே முனைந்து உருவாக்குவதல்ல. எளிமையான அணுகலை முன்னுரிமைப்படுத்தும் நேரடிக் கதைகூறலைப் போலன்றி தீவிர இலக்கியத்தின் இயல்புகளான, ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள், நுணுக்கமான சித்திரங்கள், திறந்த முடிவுகள் ஆகியவற்றினால் தொடக்கநிலை வாசகர் அதைச் சிக்கலாக உணர்கிறார். ஆழமான தத்துவ விசாரணைகள், வழக்கத்திற்கு மாறான கதைகூறல், மொழியியல்…

நவீன இலக்கியத்தை எப்படி வாசிப்பது?

தீவிர இலக்கியம் அதன் வாசகர்களிடமிருந்து வெறும் நுகர்வைக் காட்டிலும் அதிகமாகக் கோரக்கூடியது — அதற்கு ஈடுபாடு, பொருள்கொள்ளுதல், சிக்கலான தன்மையுடன் ஊடாடும் விருப்பம் தேவை. நேரியல் முறையிலான கதைசொல்லல் மற்றும் உடனடி நுகர்வை வளர்க்கும் வெகுஜனப் புனைகதைகளைப் போலல்லாமல் தீவிர இலக்கியம் அடுக்குகள், பலபொருள்படும் தன்மை கொண்டது, பெரும்பாலும் எளிமையான புரிதலுக்கு மறுமுனையில் இருப்பது எனலாம்.…

மலேசியப் பயணம்

நடுநிலைப் பள்ளி பயிலும் வயதில் என் வகுப்பு நண்பன் அவனது மாமா மலேசியாவிலிருந்து வந்திருப்பதாகச் சொன்னான். எனக்கு அந்த வரியைச் செரிக்கவே முடியவில்லை. மலேசியா ஒரு ‘ஃபாரின் கண்ட்ரி’. வெளிநாட்டுக்காரர் ஒருவர் எப்படி எங்கள் ஊரில் இருக்கும் ஒருவருக்கு உறவினராக இருக்க முடியும்? அன்றைக்குப் புகழ் பெற்ற படமான ‘விதி’ திரைப்படத்தின்  நீதிமன்ற காட்சிகளில் நடிகை …

சுஜாதாவும் சுந்தர ராமசாமியும் : ஒரு புனைவு எப்போது இலக்கியமாகிறது?

கடந்த 01.12.2024 அன்று நடந்த வல்லினம் விழாவில் பேசியதன் தொடர்ச்சி அல்லது அதன் சாராம்சம் இந்தக்கட்டுரை. இந்தக் கட்டுரையின் நோக்கம் எழுதப்படும் புனைகதைகளில் ’உயர்வு- தாழ்வு’ கற்பிப்பதல்ல. ஆனால் எழுதப்படும் அனைத்தும் ‘இலக்கியம்’ ஆகிவிடாது என்பதையும் எது இலக்கியம் என்பதையும் மீண்டும் ஒருமுறை உறுதிபடச் சொல்வதே. *** புனைகதை என்பது பரந்து விரிந்த தளம். பொழுதுபோக்கிற்கு,…

வல்லினம் இலக்கிய முகாம் – நாவல் அமர்வு

இலக்கிய வாசிப்பைக் கூர்தீட்டிக்கொள்ளும் வகையில் அமைந்திருந்தது 2024 டிசம்பர் மாதம் வல்லினம் ஏற்பாடு செய்திருந்த வல்லினம் இருநாள் இலக்கிய முகாம். முகாமை வழிநடத்திய திரு ஜா. ராஜகோபாலன் சங்கப் பாடல் முதல் நாவல் வரையில் தமிழ் இலக்கியத்தை ஒரு குறுக்குவெட்டுப் பார்வையாக அறிமுகப்படுத்தி, பொருள் புரிந்து வாசிக்கும் வித்தையை விளக்கினார். அதன்வழி,  மொழி, பிரதி, தத்துவார்த்தப்…

வல்லினம் இலக்கிய முகாம் – சிறுகதை அமர்வு

நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1ஆம் திகதிகளில் நிகழ்ந்த வல்லினம் இலக்கிய முகாமில் ஜா. ராஜகோபாலன் வழிநடத்த, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த வாசகர்களும் படைப்பாளிகளும் ஒன்றாக அமர்ந்து மரபிலக்கியம் மற்றும் நவீன இலக்கியப் படைப்புகளை வாசித்து விவாதித்தோம். இந்த நிகழ்வு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில்,அமைந்துள்ள YMCA ஹோட்டலில் நடந்தேறியது. நவம்பர் முப்பதாம் திகதி…

சங்கப் பாடல் கற்றல் கற்பித்தலில் அபத்தமும் அதை நுகரும் ஆழமும்

பாட்டு என்பது மொழியின் உச்ச வடிவம். ஒரு மொழியானது வளப்பத்தையும் அதன் முதிர்ச்சியையும் நுட்பத்தையும் அடைவது பாட்டு வடிவத்தில்தான். தன்னைப் பற்றியும் தன்னைச் சார்ந்துள்ள சமூகத்தையும் இயற்கையையும் சொற்செறிவுடன் பண்தொடுத்து அணிப்பூட்டி மொழியில் அழகுப்பட தொடுப்பதே பாட்டு. சொல் நயம், பொருள் நயம், உணர்ச்சிச் செறிவு, சுதந்திரப் போக்கு, கற்க கற்க முடிவில்லா புதுச்சுவை தருதல்…

வல்லினம் முகாம் – பக்தி இலக்கியம் அமர்வு

கடந்த 30 நவம்பர் 2024 தொடங்கி 1 டிசம்பர் 2024 வரை கோலாலம்பூரில் அமைந்துள்ள YMCAவில் வல்லினம் இலக்கிய முகாம் நடந்தேறியது. இம்முகாமில் சங்கப்பாடல், நவீன கவிதை, சிறுகதை, பக்தி இலக்கியம், நாவல் போன்ற படைப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டன. ஒவ்வொரு அமர்வையும் எழுத்தாளர் ஜா. ராஜகோபாலன் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் வழிநடத்தினார். அவ்வகையில் டிசம்பர் 1 காலையில்…

நிலமும் துயரமும் மனிதர்களும் – அரவின் குமாரின் கதைகள்

புதியவர்கள் எழுதும் கதைகளைப் படிக்கும்போது நாமறிந்த, வாசித்த புனைவுலகில் சில புதிய அனுபவங்களும் தருணங்களும் சேர்ந்துகொள்கின்றன என்பதால் புதிய எழுத்தாளர்களை வாசிப்பதில் ஆர்வமுண்டு. அந்த எழுத்தாளர் யார் என்ற எந்த அறிமுகமுமின்றி நேரடியாக கதைகளை அணுகி வாசிக்கும் வாய்ப்பை இணைய இதழ்கள் அளிக்கின்றன. புதிய பல இளம் எழுத்தாளர்களை இணைய இதழ்களின் வழியாகத்தான் அறிய முடிகிறது.…

பாவண்ணன் சிறுகதைகள்: எளிமையின் கலை

உலகில் பத்தாவது உயரிய மலையான அன்னபூர்ணா அடிவாரம் வரை கடந்த ஆண்டு ஏறியபோது முதல் மூன்று நாட்கள் அது கடுமையான பயணமாகவே அமைந்தது. நான்காவது நாள் அதிகாலை பயணம் பனிபடர்ந்த அன்னபூரணியைத் தரிசித்துக் கொண்டே நகரும் அனுபவம். முதல் மூன்று நாட்களைப் போல நான்காவது நாள் பயணத்தில் எங்குமே கற்படிக்கட்டுகள் இல்லை. செங்குத்தான மேடுகள் இல்லை.…