Category: கட்டுரை

செயல்படுவதின் கொண்டாட்டம்

2006ஆம் ஆண்டில் பெரும் கனவுகளைச் சுமந்துகொண்டு, மலேசிய இலக்கிய உலகில் கிட்டத்தட்ட ஒரு கிறுக்கனைப்போல நான் சுற்றிக்கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு. அப்போது என் வயது 24. அப்போதைய என் தோற்றத்தை எண்ணிப்பார்க்கிறேன். பெரும்பாலும் உடலைவிடப் பெரிய அளவு கொண்ட உடை, பரட்டைத்தலை, ஒட்டிய உடல், நேர்த்தியற்ற தோற்றம், கண்ணில் மட்டும் களங்கமற்ற கனவுகள். அப்போதும்…

அப்சரா: முதல் எழுத்து; முதல் நூல்; முதல் அடையாளம்.

மே 24-ஆம் தேதி அன்று, வல்லினம் இணைய இலக்கியக் குழு ஏற்பாடு செய்திருந்த, ‘முதல் எழுத்து’ நிகழ்ச்சியில் என்னுடைய முதல் நூலான ‘அப்சரா’ வெளியீடு கண்டது. ‘முதல்’ என்ற சொல்லுக்கே ஒரு தனி மந்திரம் இருக்கிறது. முதல் அடியில் இருக்கும் பதற்றம், முதல் வெற்றியில் இருக்கும் பரவசம், முதல் அனுபவத்தில் இருக்கும் ஆச்சரியம் என இவை…

தன்பாலினத்தவர்களின் அகச் சிக்கல்கள்

சமீபத்தில் என் உடல்நலப் பரிசோதனைக்கு என் நண்பர் டாக்டர் கேசவனைப் பார்க்கப்போயிருந்தேன். என் கையில் வைத்திருந்த ‘மோகனசாமி’ சிறுகதை நூலை வாங்கிப் பார்த்தவர் இது எதைப் பற்றி பேசுகிறது, என்று ஆர்வத்தோடு கேட்டார். அவர் ஒரு நல்ல வாசகர், மேடைப் பேச்சாளர். “ஓரினப்புணர்ச்சியாளர்கள் வாழ்வில் எதிர்நோக்கும் சிக்கலைப் புனைவுமொழியில் ஆழ அகலத்தோடு ஆராய்கிறது,” என்று சொன்னேன்.…

பெருங்கனவில் பங்கெடுத்தல்

2022 ஆம் ஆண்டு எழுத்தாளர் ஜெயமோகன் ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க மலேசியாவுக்கு வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியை ஒட்டி கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர் பி. கிருஷ்ணன் மொழிபெயர்த்த ஷேக்ஸ்பியர் காவிய நூல்களின் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் போதுதான், ஜெயமோகனிடம் எழுத்தாளர் ம. நவீன் ‘தமிழினி…

மொழியும் சொல்லும்

கடந்த இரண்டு ஆண்டுகளாக மலாய் சிறுகதைகளை தமிழுக்கு மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். நண்பர்களின் மொழிபெயர்ப்புகளை செம்மையாக்கமும் செய்கிறேன். அந்த வகையில் மொழி சார்ந்து பெற்ற அனுபவங்கள் முக்கியமானவை. சுவாரஸ்யமானவையும் கூட. ஆகவே, அவற்றை பதிவு செய்து வைப்பது அவசியம் என்று நினைக்கிறேன். எறும்பும் தன் கையால் எண் சாண் என்பது போல எல்லா மொழியும்…

கலை பண்பாடு ஆவணமாக்கல்

1 சமீபத்தில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த மிகப்பெரிய கலைபண்பாடு ஆவணமாக்கல் என கீழடி அருங்காட்சியகத்தையும் பொருநை அருங்காட்சியகத்தையும் சொல்லலாம். கடந்த பொங்கல் திருவிழாவின்போது பொருநை அருங்காட்சியகம் சென்றிருந்தேன். பெருந்திரளான மக்கள் கூட்டம் அங்கு அந்த நாளில் இருந்ததைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. சென்னை போன்ற பெருநகரங்களில் மால்களில் மட்டுமே இத்தகைய கூட்ட நெரிசலைப் பார்க்க முடியும். ஒரு…

புதுமைப்பித்தன்: அசாதாராண கலகக்காரன்

30. 09. 1953 தமிழ் முரசு நாளிதழில், ‘இலக்கிய மேதை யார்?’ என்ற தலைப்பில் எழுத்தாளர் வீ.க. சபாபதி  ஒரு கட்டுரை எழுதினார். ‘விபரீத ஆசை’ என்ற புதுமைப்பித்தனின் சிறுகதையை வாசித்த அவருக்கு இத்தலைப்பில் ஒரு கட்டுரை எழுத உந்தியிருக்கிறது. புதுமைப்பித்தனின் எழுத்து மலாயாவிலும் சிங்கப்பூரிலும் அப்போதெல்லாம் அரிதாகவே வாசிக்கக் கிடைத்திருந்தாலும், கதையில் வீ.க. சபாபதி…

மேன்மகன் மூர்த்தி

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 21-12-25 ஞாயிறு அன்று நடைபெற்ற ‘வல்லினம் விருது’ வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றேன்.  ஆசிரியராக இருந்து பின்னர் தேர்வுத்துறை அதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில் மலேசியத் தமிழ்ப் பள்ளிப் பாடத்திலும் தேர்வுமுறைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்ததோடு நவீன இலக்கிய விழிப்பைக் கல்விக்குள் உண்டாக்கிய பி. எம். மூர்த்தி அவர்கள் இவ்வாண்டு விருதுக்குரியவர்.…

புதுமைப்பித்தனின் பசித்த மனிதர்கள்

பசித்திருக்கும் மனிதனை அகக்கண்கொண்டே பார்த்துணரமுடியும். எல்லா சாமான்ய மனிதர்களுக்கும் இந்த அகப்பார்வை அமைவதில்லை. பசியால் இருக்கும் மனிதர்களுக்குத்தான் பசியோடு இருக்கும் சக மனிதனைக் கண்டுணரும் நுண்ணியம் வாய்க்கும். கருணை உள்ளங்கொண்டவர்களாலும் அவர்களை எளிதில் அடையாளம் காணமுடியும்.  இவர்களில் துல்லிதமாய் உணர்பவன் படைப்பாளன் மட்டுமே. ஏனெனில் அவன் தன்னைச் சுற்றிவாழும் சமூகத்திடமிருந்தே கதையை உருவி எடுக்குகிறான். மனிதர்களின்…

வல்லினம் முகாம் 2025

முதல் பகுதி: சிறுகதையின் வரலாறு சாலினி வருடந்தோறும் வல்லினம் விருது விழாவுக்கு முன் நடத்தப்படும் வல்லினம் முகாமில் 2021ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு முறையும் பங்கெடுத்து வந்திருக்கிறேன். இம்முறையும் 21 டிசம்பர் முதல் 22 டிசம்பர் என 2 நாட்களுக்கு  எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களால் வழிநடத்தப்பட்ட வல்லினம் இலக்கிய முகாமில் கலந்துகொண்டேன். இதற்கு முன்…

வல்லினம் விருது விழா : 8 மாத நினைவுக்குறிப்பு

வல்லினம் விருது பி. எம். மூர்த்தி அவர்களுக்கு என முடிவானப்பின் மே 11-ஆம் திகதி வல்லினம் குழுவினரோடு சென்று காஜாங் நகரில் அவரைச் சந்தித்தேன். அந்நாளில் அ. பாண்டியன் குடும்பப் பணியாக காஜாங் வந்திருந்ததால் அந்நாளே பொருத்தமானது என முடிவானது. அரவின் குமார், ஆசிர் லாவண்யா ஆகியோரும் இணைந்துகொண்டனர். ‘காஜாங் சாத்தே’ பிரபலமான உணவகம். அங்கு…

நான் அறிந்த பி.எம்.மூர்த்தி

2008 ஆம் ஆண்டின் இறுதி அது. புருவங்களிலும் மீசையிலும் உரோமம் அடர்ந்திருந்த ஒருவர் நான் வேலை செய்த பள்ளிக்கு வந்திருந்தார். அவர் கையில் அவ்வருட ஆறாம் ஆண்டு மாணவர்களுக்காக நான் தயாரித்த பயிற்சி நூல் (module) இருந்தது. “இதைத் தயாரித்தவர் நீங்களா?” என்றார். “ஆம்” என்றேன். தன்னைத் தேர்வு வாரிய அதிகாரி என அறிமுகம் செய்து…

பாட்டையை உருவாக்கிய முன்னோடி

2016 ஆம் ஆண்டு வாக்கில் எழுத்தாளர் ஜெயமோகன் விதி சமைப்பவர் எனும் கட்டுரையை எழுதியிருந்தார். ஒரு துறைக்குள் தனியொரு மனிதராகத் தளராத ஊக்கத்தால் மாற்றங்களையும் பங்களிப்பையும் கொண்டு வரும் முன்னோடிகளைப் பற்றிய மிக முக்கியமான கட்டுரை அது. அந்தக் கட்டுரையையொட்டி எழுத்தாளர் ம. நவீன் மலேசியாவில் அப்படி விதி சமைப்பவர் எனும் பதத்துக்கு எல்லா வகையிலும்…

மூர்த்தியும் நானும்

சிறு வயது முதலே நான் ஒரு தனிமை விரும்பி. நட்பு வட்டம் என்று எனக்கு இருக்காது. பள்ளிக்குச் செல்லும் முன் நண்பர்கள் எவருமிலர். பள்ளிக்குச் சென்ற காலத்தில் ஒரு சில தோழர்கள். அவர்களுடன் பள்ளி அளவிலான நட்பு மட்டுமே. ஆசிரியரான பிறகு ஒரு சில ஆசிரிய நண்பர்கள். அவர்களுடனும் பள்ளிக்கூடம், செய்யும் தொழில் என்ற அளவில்தான்…

ஆலவாயன் – அர்த்தநாரி: இரு நாவல்களில் ஒரு பார்வை

குடியானவர்களின் வாழ்க்கை முறையை ஆங்கிலேயர் ஆட்சி காலப் பின்னணியில் சொல்லப்பட்டுள்ள கதை ‘ஆலவாயன்’. காளி, பொன்னா, வல்லாயி, சிராயி, முத்து, வெங்காயி, நல்லையன் என ஒவ்வொருவரும் சேர்ந்து கதையை நகர்த்தியுள்ளார்கள். நாவலின் தொடக்கத்தில் காளியின் தற்கொலை மிரட்டும் தொனியில் துல்லியமாக சித்தரிக்கப்பட்டது போலவே நாவலின் பல பகுதிகளில் சித்தரிப்புகள் ஒரு விதப் பதற்றத்தைக் கொடுக்கக்கூடியவை. காளியின்…