Category: கட்டுரை

பல கடல்கள் கடந்து:  உலகப் பெண் படைப்பாளர்களின் பெண்ணிய நோக்கு

‘பல கடல்கள் கடந்து’ என்ற மொழிபெயர்ப்பு நூல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சமகாலப் பெண் எழுத்தாளர்களின் கதைகளைக் கொண்ட நூலாகும். நரேன் தேர்ந்தெடுத்த இக்கதைகள் எனக்கு அபாரமான வாசிப்புச் சுவையைக் கொடுத்தது. பல கதைகளை வாசித்த பின்னரே, இந்த எட்டு கதைகள், தமிழுக்குப் புதியது என்று முடிவெடுத்து மொழிபெயர்த்திருக்கிறார். அவரின் இந்த மெனக்கெடல் வாசகனுக்கு வாசிப்பின்பத்தையும்,…

லீகாட்: பருவக் கோளாறின் கொந்தளிப்பு

ஒரு முழுமையான வாழ்க்கையைச் சொல்வதுதான் நாவல் என்கிறார்கள் சான்றோர்கள். ஆனால் சிதறிக் கிடக்கும் வாழ்க்கையிலிருந்து நாவலை உருவாக்குவது எளிதானதல்ல. அது கைதேர்ந்தவர்களின் திறன்களால் மட்டுமே கூடிவருவது. தரையில் கொட்டிய தானியங்களைப்போல  விரவிக்கிடக்கிறது வாழ்க்கை. அதனைப் பொறுமையாகப் பிரித்து எடுத்து உணவாகச் சமைப்பதற்கு ஒப்பானதுதான் நாவல். அதுவே ஒரு கட்டமைப்புக்குள் அடங்கும்போதுதான் கலையாகிறது. அந்த ஒருங்கமைவுக்குள் கூடிவராமல்…

சாம்பசிவம் – ஞானாமிர்தம்: மலேசிய, இலங்கைத்தமிழ்ச் சமூகத்தின்வரலாற்றுப்பதிவு

மலேசியாவில் நூறாண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த நாவல், ‘சாம்பசிவ ஞானாமிர்தம் அல்லது நன்னெறிக் களஞ்சியம் ஓர் இனிய கற்பனா சரிதம்’. கோலாலம்பூரின் லாஸர் அண்ட் சன்ஸ் அச்சகத்தில் அச்சிடப்பட்டு 1927ஆம் ஆண்டு வெளிவந்த இந்நாவல், மலேசிய தமிழ் இலக்கியத்தின் முன்னோடி இலக்கியங்களில் ஒன்று. நூலாசிரியரின் அருணாசலம் நாகலிங்கத்தின் (1901-1979) 125வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிள்ளைகள் நா.…

கதைக்குள் பிணைந்த கட்டுக்கதைகள்

எழுத்தாளர் ம. நவீன் எழுதிய ‘வேப்டியான்’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதையும் மாறுபட்ட உலகத்தின் விளிம்பில் கால்பதிக்கச் செய்து அதன் ஆழத்தை எட்டிப்பிடிக்கத் தூண்டுகிறது. ஒவ்வொரு கதையையும் ஒருமுறைக்கு இருமுறை வாசித்திட்ட பிறகே சில முக்கிய இடங்களை அடையாளம் கண்டும் கதை நகர்த்தலின் மையத்தைத் தொட்டும் புதிய அனுபவங்களை உருவாக்கி அதனூடே பயணிக்க முடிந்தது.…

வாழ்தலின் பயன் – இகிரு திரையிடல் அனுபவம்

உலகின் முக்கியமான சினிமாக்களைக் கண்டு உரையாடும் பேசும் படம் சந்திப்பின் நான்காவது நிகழ்ச்சி 22 ஆகஸ்டு 2026 அன்று மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இம்முறை சந்திப்புக்கான படமாக ஜப்பானிய இயக்குநர் அகிரா குரோசாவாவின் (Akira Kurosawa) ‘இகிரு’ (Ikiru) திரைப்படம் திரையிடப்பட்டது. உலக சினிமா வரலாற்றில் மிக முக்கியமான இயக்குநராக அகிரா குரோசாவா மதிப்பிடப்படுகிறார். ரஷோமோன்…

செயல்படுவதின் கொண்டாட்டம்

2006ஆம் ஆண்டில் பெரும் கனவுகளைச் சுமந்துகொண்டு, மலேசிய இலக்கிய உலகில் கிட்டத்தட்ட ஒரு கிறுக்கனைப்போல நான் சுற்றிக்கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு. அப்போது என் வயது 24. அப்போதைய என் தோற்றத்தை எண்ணிப்பார்க்கிறேன். பெரும்பாலும் உடலைவிடப் பெரிய அளவு கொண்ட உடை, பரட்டைத்தலை, ஒட்டிய உடல், நேர்த்தியற்ற தோற்றம், கண்ணில் மட்டும் களங்கமற்ற கனவுகள். அப்போதும்…

அப்சரா: முதல் எழுத்து; முதல் நூல்; முதல் அடையாளம்.

மே 24-ஆம் தேதி அன்று, வல்லினம் இணைய இலக்கியக் குழு ஏற்பாடு செய்திருந்த, ‘முதல் எழுத்து’ நிகழ்ச்சியில் என்னுடைய முதல் நூலான ‘அப்சரா’ வெளியீடு கண்டது. ‘முதல்’ என்ற சொல்லுக்கே ஒரு தனி மந்திரம் இருக்கிறது. முதல் அடியில் இருக்கும் பதற்றம், முதல் வெற்றியில் இருக்கும் பரவசம், முதல் அனுபவத்தில் இருக்கும் ஆச்சரியம் என இவை…

தன்பாலினத்தவர்களின் அகச் சிக்கல்கள்

சமீபத்தில் என் உடல்நலப் பரிசோதனைக்கு என் நண்பர் டாக்டர் கேசவனைப் பார்க்கப்போயிருந்தேன். என் கையில் வைத்திருந்த ‘மோகனசாமி’ சிறுகதை நூலை வாங்கிப் பார்த்தவர் இது எதைப் பற்றி பேசுகிறது, என்று ஆர்வத்தோடு கேட்டார். அவர் ஒரு நல்ல வாசகர், மேடைப் பேச்சாளர். “ஓரினப்புணர்ச்சியாளர்கள் வாழ்வில் எதிர்நோக்கும் சிக்கலைப் புனைவுமொழியில் ஆழ அகலத்தோடு ஆராய்கிறது,” என்று சொன்னேன்.…

பெருங்கனவில் பங்கெடுத்தல்

2022 ஆம் ஆண்டு எழுத்தாளர் ஜெயமோகன் ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க மலேசியாவுக்கு வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியை ஒட்டி கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர் பி. கிருஷ்ணன் மொழிபெயர்த்த ஷேக்ஸ்பியர் காவிய நூல்களின் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் போதுதான், ஜெயமோகனிடம் எழுத்தாளர் ம. நவீன் ‘தமிழினி…

மொழியும் சொல்லும்

கடந்த இரண்டு ஆண்டுகளாக மலாய் சிறுகதைகளை தமிழுக்கு மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். நண்பர்களின் மொழிபெயர்ப்புகளை செம்மையாக்கமும் செய்கிறேன். அந்த வகையில் மொழி சார்ந்து பெற்ற அனுபவங்கள் முக்கியமானவை. சுவாரஸ்யமானவையும் கூட. ஆகவே, அவற்றை பதிவு செய்து வைப்பது அவசியம் என்று நினைக்கிறேன். எறும்பும் தன் கையால் எண் சாண் என்பது போல எல்லா மொழியும்…

கலை பண்பாடு ஆவணமாக்கல்

1 சமீபத்தில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த மிகப்பெரிய கலைபண்பாடு ஆவணமாக்கல் என கீழடி அருங்காட்சியகத்தையும் பொருநை அருங்காட்சியகத்தையும் சொல்லலாம். கடந்த பொங்கல் திருவிழாவின்போது பொருநை அருங்காட்சியகம் சென்றிருந்தேன். பெருந்திரளான மக்கள் கூட்டம் அங்கு அந்த நாளில் இருந்ததைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. சென்னை போன்ற பெருநகரங்களில் மால்களில் மட்டுமே இத்தகைய கூட்ட நெரிசலைப் பார்க்க முடியும். ஒரு…

புதுமைப்பித்தன்: அசாதாராண கலகக்காரன்

30. 09. 1953 தமிழ் முரசு நாளிதழில், ‘இலக்கிய மேதை யார்?’ என்ற தலைப்பில் எழுத்தாளர் வீ.க. சபாபதி  ஒரு கட்டுரை எழுதினார். ‘விபரீத ஆசை’ என்ற புதுமைப்பித்தனின் சிறுகதையை வாசித்த அவருக்கு இத்தலைப்பில் ஒரு கட்டுரை எழுத உந்தியிருக்கிறது. புதுமைப்பித்தனின் எழுத்து மலாயாவிலும் சிங்கப்பூரிலும் அப்போதெல்லாம் அரிதாகவே வாசிக்கக் கிடைத்திருந்தாலும், கதையில் வீ.க. சபாபதி…

மேன்மகன் மூர்த்தி

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 21-12-25 ஞாயிறு அன்று நடைபெற்ற ‘வல்லினம் விருது’ வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றேன்.  ஆசிரியராக இருந்து பின்னர் தேர்வுத்துறை அதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில் மலேசியத் தமிழ்ப் பள்ளிப் பாடத்திலும் தேர்வுமுறைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்ததோடு நவீன இலக்கிய விழிப்பைக் கல்விக்குள் உண்டாக்கிய பி. எம். மூர்த்தி அவர்கள் இவ்வாண்டு விருதுக்குரியவர்.…

புதுமைப்பித்தனின் பசித்த மனிதர்கள்

பசித்திருக்கும் மனிதனை அகக்கண்கொண்டே பார்த்துணரமுடியும். எல்லா சாமான்ய மனிதர்களுக்கும் இந்த அகப்பார்வை அமைவதில்லை. பசியால் இருக்கும் மனிதர்களுக்குத்தான் பசியோடு இருக்கும் சக மனிதனைக் கண்டுணரும் நுண்ணியம் வாய்க்கும். கருணை உள்ளங்கொண்டவர்களாலும் அவர்களை எளிதில் அடையாளம் காணமுடியும்.  இவர்களில் துல்லிதமாய் உணர்பவன் படைப்பாளன் மட்டுமே. ஏனெனில் அவன் தன்னைச் சுற்றிவாழும் சமூகத்திடமிருந்தே கதையை உருவி எடுக்குகிறான். மனிதர்களின்…

வல்லினம் முகாம் 2025

முதல் பகுதி: சிறுகதையின் வரலாறு சாலினி வருடந்தோறும் வல்லினம் விருது விழாவுக்கு முன் நடத்தப்படும் வல்லினம் முகாமில் 2021ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு முறையும் பங்கெடுத்து வந்திருக்கிறேன். இம்முறையும் 21 டிசம்பர் முதல் 22 டிசம்பர் என 2 நாட்களுக்கு  எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களால் வழிநடத்தப்பட்ட வல்லினம் இலக்கிய முகாமில் கலந்துகொண்டேன். இதற்கு முன்…