Category: சிறுகதை

கோட்ட வூடு

கோட்ட வூட்டுக்கு முன்னால நின்னுட்டு இருந்தேன். பதின்பருவ பெண்ணின் பிடரி மசிரைப் போல பொசபொசன்னு விரவியிருந்த இருட்டு, ராப்பூரா நிழலை விழுங்கியிருக்க, அப்போ தான் தெளியத் தொடங்கியிருக்கும் நெனப்புத் தப்பினவன் மனசைப் போல சூரிய வெளிச்சம் பரவத் தொடங்கிய விடியகால நேரம். வெத்தலையைப் பாக்கோட மென்னு சவச்சி எச்சிலோட முழுங்கிட்டு, திண்ணையில கால் நீட்டிட்டு உக்காந்திருக்குற…

சாம்பல்

“இது என்ன புது சடங்கா இருக்குது. எங்க தாத்தா, பாட்டி, சின்னத்தாத்தா யாருக்குமே இப்படிசெஞ்சதில்லை” என்றாள் சுந்தரி. “எரிச்சதுக்கு மறுநாள் பால் ஊத்தறதுக்கு சுடுகாட்டுக்கு போவாங்க. அங்க ஒரு பிடி சாம்பல எடுத்து ஒரு சொம்புல போட்டு துணியால மூடி கட்டிடுவாங்க. அப்பறம் நேரா சீறங்கப்பட்டணம் போயி கரைச்சிட்டு வந்துடுவாங்க. அதத்தான் நான் பார்த்திருக்கேன்” வேலு…

வீடு திரும்புதல்

இரண்டு, மூன்று மாதமாகவே எப்போது வேண்டுமானாலும் நிறுவனத்தைத் திறக்கலாம் என்று பேச்சு இருந்தது. கடைசியில் உண்மையாகிவிட்டது. தினம் இருபது பேராக வரச் சொல்லியிருந்தார்கள். இன்றுபிரசாத்தின் முறை. பிரசாத் ஒரு பி. பி. ஓ ஊழியர். அலுவலக வாகனத்தில் ஏறியவுடனே ஓட்டுநர் ‘குட் மார்னிங்’ வைத்து ‘வெல்கம் சார்’ என்று கூறி ஒரு சாக்லேட்டும் கொடுத்தார். ஓட்டுநர் பெயர்…

பிரிட்னி

கோயில் வாசலில் சட்டையை முந்தித் தள்ளியத் தொப்பை வைத்திருக்கும் தன் நண்பன் மகேன் ராவோடு காத்திருந்தான் தமிழ்செல்வம். மௌன சிரிப்புடன், வெட்கப்பட்டு, கீழே குனிந்தப்படி அவனைக் கடந்தாள் தமிழ்செல்வி. அவளுக்கு முன்பே மாப்பிள்ளை யாரென்பது காட்டப்பட்டிருக்க வேண்டும். நேற்று இரவே இந்த தமிழைப் போலவே எல்லாத் தகவலையும் சமூக ஊடகங்களின் வழியாக அந்த தமிழும் ஆராய்ந்திருப்பாள்.…

அன்னம்

கிளப்புகள் சில கூடி நடத்தும் மயானம் அது. ஊருக்கு மையத்தில் பழைய பேருந்து நிலையம் பின்புறத்திலேயே அந்த மின்தகனமயானம் அமைந்திருக்கும் என்பதை நான் யூகித்திருக்கவில்லை. உள்ளே என்ன இருக்கிறது என்பது முதல் பார்வையில் தெரியா வண்ணம், எட்டு அடி உயர மென் நீல வண்ண  காம்புண்டு சுவர். உள்ளே அதை ஒட்டி வளர்க்கப்பட்ட பொன் கொன்றை…

உய்வழி

‘மெய் இன்று கண்டேனடா,  முகமன்று போலின்றி நிறமாறிப் போனதை கண்டேனடா. சொல்லெல்லாம் எரிக்க எரிக்க உளமெல்லாம் கசக்க கசக்க நுதல் சுருங்கும் தருணமெல்லாம் கண்டேனடா! மா தவம் நீங்கிட வந்தேனடா! அயோத்தி வந்தேனடா!ஐயம் என்மேனி கண்டாயோடா! கொடுந்தீ சொல்லும் கேளடா’உச்சஸ்தாயில் சீதையின் குரல். சிவந்த கனலின் நிழல் போலசெந்துணிச்சுருளைகள் முன்னே படர, காந்தள் மலரின் இதழ்…

மூவிலைத் தளிர்

பாடியநல்லூர் குமரப்பாவுக்கு நீரிழிவு நோயால் வலது கால் மூட்டுக்கு கீழ் அகற்றப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போய் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. எப்போதோ வலது காலில் பின் பகுதியில் எதுவோ குத்தி காயம் ஏற்பட்டிருக்கிறது. அது மூன்று மாதம் ஆகியும் ஆறவில்லை. அந்த முதல் புண்ணைச் சுற்றி மேலும் சில இடங்களிலும் புண்கள் வந்திருந்தன. அவையும்…

பெருங்கை

கேசவன் எப்போது வேண்டுமானாலும் ராத்திரியைக் கொண்டுவரக்கூடியவன். சிறிய அறைக்கு வடக்குப்பக்கமாகத் திறக்கும் ஒரே ஒரு ஜன்னல் தான். அதை மூடவும் முடியாது. இரு ஜன்னல் கதவுகளும் எப்போதோ விழுந்துவிட்டன. அதற்கு அப்பால் கேசவனின் கரிய விலாப்பக்கம் வந்து முழுமையாக மூடிவிட்டதென்றால் படுத்திருக்கும் இடத்திலிருந்து அவன் பார்க்கும்போது வெளியே கூரிருட்டு நிறைந்திருக்கும். பெரும்பாலும் அவனுக்குக் கேசவனுடன் இரவில்தான்…

வர்ணகலா

இந்தச் சிறிய கதையின் முடிவு எப்படி அமையப்போகிறது என்பதைத் தேர்ந்த வாசகரான நீங்கள் இதற்கு அடுத்தடுத்த பத்திகளில் நிச்சயமாகவே ஊகித்துவிடுவீர்கள். அய்நூறுக்கும் அதிகமானவர்கள் உட்கார்ந்திருந்த அரங்கில், மிதுனா பாலப்பா இந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்ததுமே நானும் முடிவைச் சட்டென ஊகித்துவிட்டேன். ஆனால், அந்த முடிவை நோக்கி கதை எவ்வழியால் அசையப்போகிறது என்று எனக்குப் புரியவில்லை. எனவே…

நெருப்பில் வளர்பவை

ததும்பத்ததும்ப மக்காச்சோளத்தட்டைகளுடன் பள்ளத்திற்குள் இறங்கி ஏறித் திணறியபடி தாடிக்கொம்பு விலக்கில் வளைந்து கொண்டிருந்தது வேன். நான் ஓடிப்போய் அதன் முதுகில் கொட்டிக்கிடந்த சோளத்தட்டையில் ஒன்றை வலுப்போட்டு ஒடிக்க முயன்றேன், முடியவில்லை. சாலையோர மரத்திற்குக்கீழே சாயங்கால இருளுக்குள் தனது பள்ளிச்சீருடையுடனும் முகம் கழுவிய வெளிச்சத்துடனும் நின்று கொண்டிருந்த தான்யா வேண்டாமென்பதைப்போல கையை ஆட்டினாள். வேன் நகர்ந்து கொண்டேயிருந்தது.…

ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும்

ஃபோன் பேசிவிட்டு ஜஸ்டின் கொஞ்சம் பதற்றத்துடன் திரும்பி வருவதைக் கசாயம் கவனித்தான். “என்ன மக்கா? மாமாவா?” “ஆமா வர சொல்லுகாரு. என்னவொ பெரிய சோலியாம். வண்டி எடுல” கசாயத்துக்கு அவன் சொல்லும் தொனியிலேயே சங்கதி ஓரளவு புரிந்தது. பள்ளி நாட்களிலிருந்தே அவனுடன் இருப்பவன் கசாயம். ஜஸ்டினின் அப்பா மோகன் ராஜ் அவன் பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு…

லஜ்ஜா

I மாமாவிடம் இருந்து போன் கால் வந்தது.“சேகரு, ஆபிஸிற்கு வா.” என்று சொல்லிவிட்டு என் பதிலைக் கேட்குமுன் அழைப்பைத் துண்டித்துவிட்டார். அவர் எப்போதும் அப்படித்தான். பைக்கை எடுத்துக்கொண்டு உடனே கிளம்பினேன். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் மாமாவிடம் வேலைக்குச் சேர்ந்தேன். என்ன வேலை என்று கேட்டால் என்னால் சரியாகப் பதில் சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை. நான்…

மந்திர மெத்தை

தூக்கம் ஏமாற்றிக் கொண்டிருந்த நள்ளிரவில் அறைக்குள் ரகசியமாக நுழைந்து உள்ளே சுற்ற ஆரம்பித்தது ஏதோ ஒரு பாட்டிசை. கைப்பேசி எடுத்து மணி பார்த்தேன், மூன்று. எழுந்து வெளியே வந்தேன். அப்பாவும் அம்மாவும் உறங்காமல் சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்கள். “ஏதாவது வேணுமா” என்றாள் அம்மா. தலையசைத்துத் தண்ணீர் குடிக்கச் செல்வது போல சமையலறைக்குள் சென்று…

தூசி

”அண்ணே பீமநகரி பஸ் எப்ப வரும்னு சொல்ல முடியுமா” என டீக்கடைக்காரரிடம் வெளியூர்க்காரர்களுக்கேயுரிய ஒரு அந்நியத்தன்மையையும் ஐயத்தையும் ஒருங்கே திரட்டி மெல்லக் கேட்டேன். அதைக் காதில் வாங்காத பாவனையில் டீயை ஆற்றிக் கொண்டே “அதெல்லாம் நேரக்கணக்கு கிடயாது. நில்லும். அதுவா வரும்போது வரும்” என்றார். அங்கிருந்த பொன்மஞ்சள் நிறத்திலான பஜ்ஜியைப் பார்த்தபோது பசி அடிவயிற்றைக் கிள்ளியது.…

ஆசான்

“வீட்டுக்கு வந்து ரெண்டு மணிக்கூட ஆகல, அதுக்குள்ள எங்கல போற? ஒனக்கு பிடிக்குமேன்னு ரசவட செஞ்சு வச்சா, ஒரு வாயி திங்கல. போக்கு சரியில்ல கேட்டியாடே…” நான் சட்டையை மாற்றும் போது, கூடவே அம்மையின் அர்ச்சனையும் ஆரம்பித்தது. “வெளிய போறதுலாம் சரி, வேற ஏதாவது பண்ணிட்டு வந்த, வீட்டு நடைல ஏறக் கூடாது. அப்பனுக்க எல்லா…