Category: சிறுகதை

வண்டி

நாச்சியாவிற்கு ஒரு கணம் நெஞ்சு அடைத்துவிட்டது. உணவகத்தின் பின்புறச் சமையல் கூடத்தில், மிளகாய் தூளை அள்ளிப் போட்டு நறுக்கியக் கோழித்துண்டுகளை அலுமினிய அகப்பையால் கிண்டிக் கொண்டிருந்தவளின் கைகள் சட்டென பிடியை விட்டன. முக்காடாக வேயப்பட்டிருந்தச் சேலைத்தலைப்பையை வாயில் பொத்தி, “யா ரஃபி, என்ன கொடுமையிது!” வயிற்றைத் தள்ளிக் கொண்டு நிறைமாதமாக வந்து நின்ற அவளைப் பார்க்கும்போது…

குத்தாங்கட்டை ரகசியம்

கோபால், ரெக்ஸ் தியேட்டரை ஒட்டி இருந்த ஒரு பெரிய ஆங்சானா மரத்தடியில் ‘இங்கே பெரட்டா ரொட்டி கிடைக்கும்’ என்று போர்டு தொங்கிய ஸ்டாலுக்குப் போனான். தியேட்டரில், ‘16 வயதினிலே’ திரைப்படம் காண்பிக்கப்படும் போஸ்டர் தெரிந்தது. அன்று, ஞாயிற்று கிழமையாதலால் காலை 11 மணிக்கு ஒரு சிறப்பு காட்சி இருந்தது போல. ஸ்டாலில் நிறைய விடலைப் பையன்கள்…

தொலைவில் எங்கோ

தொலைதூரத்தில் இருந்த பூமி என்னும் கோளில் இருந்து வந்து சேர்ந்த மனிதனைப் பார்ப்பதற்காக ஆபா என்னும் கோளில் வாழ்ந்த மக்களான ஆபிகள் நகர்ச்சதுக்கத்தில் பெருந்திரளாகக் கூடினார்கள். அவர்கள் எதிர்பார்த்து வந்த ஒரு நிகழ்வு அது. ஆகவே, ஒவ்வொருவரும் கூச்சலிட்டுக் கொண்டும், விவாதித்துக் கொண்டும் இருந்தார்கள். அவர்களின் ஓசை அலையலையாக எழுந்தது. நகர்ச்சதுக்கம் மிகப் பெரிய கல்பீடம்…

கருப்பன்

எனக்கும் கருப்பனுக்கும் உறவு சுமூகமாக இருக்கப் போவதில்லை என்று முதல் நாளே தெரிந்துவிட்டது. வீட்டு வாசலிலேயே என்னை நோக்கி குரைத்துக் கொண்டு பாய்ந்து வந்தது. நல்ல வேளையாகக் கம்பி கதவு மூடியிருந்ததால், கதவை இறுக்கிப் பிடித்துக் கொண்டேன். உள்ளிருந்து குரைத்துக் கொண்டு நின்றது. அப்பா வந்து அதட்டி உள்ளே விரட்டிவிட்டு பிறகு கதவைத் திறந்தார். அப்பா…

திருவேட்கை

01 லண்டனிலுள்ள கப்பல் கட்டுமானத் துறையில் உயர் பதவி வகித்தவர் மோர்கன். அவருடைய ஒரே மகன் அல்பேர்ட் தன்னுடைய வீட்டுப் பணிப்பெண் கரோலினாவுடன் பள்ளி முடித்து திரும்பி வந்து கொண்டிருந்தான்.  வீதியோரச் சந்தை கடையொன்றில் சரிகை வைத்த சிறிய கைக்குட்டைகள் பல வண்ணத்தில் தொங்கின. நெரிசலான கடை தெருவில் கூடத் தொடங்கிய பலரும் பெறுமதியான கைக்குட்டைகளை ரசித்து…

சுழி

வெளியே நல்ல வெயில். ரேஷன் கடையில் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக நிற்க வைத்துவிட்டார்கள். சாமான்களைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்தேன். வீட்டு வாசலில் இருந்து பார்த்தபோது வீட்டின் பிரதான கதவு திறந்தே கிடந்தது. ஸ்கேன் எடுக்கச் சென்றிருந்த தாயும் மகளும் வந்துவிட்டார்கள். வாசல் கதவை அப்படியே திறந்து போட்டுவிட்டு உள்ளே ஏதோ ஒரு…

ரசவாதம்

1 கரட்டுப்பட்டியின் முதல் மூன்று குடும்பங்களில் ஒன்று ராமசாமிப் பத்தருடையது. அப்படித்தான் அப்பா சொன்னார். மற்ற இரண்டு, செல்லமுத்துப் பூசாரி குடும்பமும், காவல்கார மூக்கையா மாமாவுடையதும். ஆவலாகக் கதைகேட்கும் பிராயம் எனக்கு. ஆதாரங்களெல்லாம் கேட்கத் தெரியாது. ஆதாரபூர்வமாக முன்வைக்கப்படும் வரலாற்றுச் செய்திகளே நம்பத்தக்கவை அல்ல என்று சொல்கிறவர்களும் உண்டு, அல்லவா! முதல் வாக்கியத்தை என்னிடம் சொல்லவில்லை…

சாலையோர விதைகள்

விடுதியின் ஜன்னலிலிருந்து எந்தவொரு காட்சியையும் பார்க்கவிடாமல் தடுத்துக் கொண்டிருந்த அந்த மதிலையே பார்த்துக் கொண்டிருந்தேன். மொரமொரப்பான சிமெண்ட் பூசி எழுப்பப்பட்ட சுவர் செங்கற்கள், தனித்தனி அறைகளில் அடைந்து கிடக்கும் விடுதிவாசிகளையே ஞாபகப்படுத்தியது. உறுதியான சிறைகளுக்குள் நேராக அடுக்கப்பட்ட கூண்டுகளைப் போன்ற அறையில் பிரித்து வைக்கப்பட்டுள்ள விடுதிவாசிகளைப் போலவே இருந்தது சுவர். நான் ஏதோ ஒரு சிறையில்,…

தனியன்

“இரும்மா, நான் மேல போனதுக்கப்பறமா கதவத் தெற. அவங்ககிட்ட நான் இல்லைன்னு சொல்லி அனுப்பிடு. வேற எதுவும் பேசாத. புரியுதா” அம்மாவின் அருகில் குனிந்து எச்சரித்துவிட்டு விறுவிறுவென்று படிகளில் ஏறினேன்.  நான் மேலே வரும்வரை தலைதூக்கிப் பார்த்திருந்தவளின் முகத்தில் குழப்பமும் கொஞ்சம் கவலையும்.அறைக்குள் புகுந்து கதவைத் தாழிட்டேன்.  எந்தச் சத்தமும் கேட்கவில்லை. கதவைச் சாத்திவிட்டால் எப்போதுமே…

சிந்திப் பரவி தெருவின் அமளியிலேறும் நீலம்

“இரு கொட்டகைக்கிடையில் எப்போதும் போல தேங்கி நிற்கும் பாசியேறிய நீரில் தவளைக்கண்கள் முளைத்திருக்கும். அவை தலைப்பிரட்டைகளாய் அவ்வப்போது வெள்ள மிகுதியில் கொட்டைகையோரம் மண் திட்டாய் உயர்த்தப்பட்ட கரையோரம் உலவித் திரியும் போது பார்த்திருக்கிறேன். இப்போது பெரிய மழை பெய்து நாளானதில் மடுவுக்குள் சுருங்கிக் கொண்ட நீண்ட கால்களைக் கொண்டு பறக்கும் தவளைகளைக் கொஞ்சமாக உற்றுப் பார்த்தபடி…

வகுப்பறையில் ஒரு திமிங்கலம்

பவித்ரா தனது இடது கையை உயர்த்தி ஆங்கிலத்தில் சப்தமாகச் சொன்னாள் “வகுப்பு முடிய இன்னும் ஐந்து நிமிஷம் தானிருக்கிறது.” அதைக் கேட்டதும் மாணவர்கள் சிரித்தார்கள். அவளது கேலியைக் கவனிக்காமல் சிவானந்தம் மோபிடிக் நடத்திக் கொண்டிருந்தார். வகுப்பறையிலிருந்த மாணவர்களில் எவரும் பாடத்தைக் கேட்டதாகத் தெரியவில்லை. ஏன் இவர்கள் உலகப் புகழ் பெற்ற நாவல் ஒன்றை அறிந்து கொள்ள…

அழைப்பு

அந்தி சற்று தயங்கியபடியே மயங்கிக் கொண்டிருக்கிறது. பாவமன்னிப்புப் பெற ரோமன் கத்தோலிக்கர்கள் மாதா கோவிலுக்குச் செல்லும் வெள்ளிக்கிழமையின் மாலை இது. நான் அங்குச் சென்று அதைச் செய்வது தெரிந்தால் அத்தை கோபப்படுவாள். யாருக்கும் தெரியாமல் செல்ல வேண்டும். முகம் தெரியாத ஒருவரிடம் மட்டுமே நம் பாவங்களையெல்லாம் அறிக்கையிட முடியும். ஒருவேளை எனக்கு அது விடுதலை அளிக்கலாம்…

டோலிசாமி

மூங்கில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தாலும் டோலி தூக்கும் தொழிலாளிகளால் மன்னரைப் போலவே மதிக்கப்பட்டார் ராமசாமி. பெயரே ராமசாமியாக அமைந்ததால் இன்னொரு சாமியை இணைத்து ‘ராமசாமி சாமி’ எனக் கூப்பிட சாமிகளின் வாய்க்கு அவ்வளவு பொறுமை இல்லை. தனியாகப் பட்டப் பெயரையும் அவருக்குச் சூட்டுவதில் எந்தச் சாமியும் மும்முறமாக இதுவரை முயன்றதில்லை. மூக்கு நீளமாக இருந்ததால் ஒருவருக்கு ‘மூக்கு…

தேவனின் நாயனம்

சீமைச் சாராயத்தின், புதிதாக இழைத்த மரச்செதுக்கின் நெடி அறையெங்கும் நிரம்பியிருந்தது. “டே, இங்க வாடா? எங்க… அம்பி சொல்றதச் சொல்லு… அம்பி சொல்லு…இது பேரு என்ன?” பிள்ளை, அம்பி இரண்டு பேர் மஜாவிலுமாக ஒரு பத்து பேர் இருந்தார்கள். பிள்ளையின் ரசிகர் ஒருவர் பாரீஸிலிருந்து தருவித்திருந்த மதுக் குப்பி நடுநாயகமாக அமர்ந்திருந்தது. அரை போதையில் தலை…

மோகப்புயல்

சின்னச்சாமி அண்ணா வண்டியை நிறுத்திவிட்டு தூக்கம் தொலைத்த முகத்தோடு சோர்வாக வந்தார். “வாண்ணா” என்று ஸ்டூலை எடுத்துக் கொடுத்தேன். “வேண்டாம்” என்று சொல்லி விட்டு கடைப்பலகையின் வலது ஓரம் அமர்ந்தார். முதுகுப்பக்கம் சட்டை வேர்வையில் ஒட்டியிருந்தது. நான் கடையைவிட்டு இறங்கினேன். தலை குனிந்தபடி தரையில் ஓரிடத்தையே பார்த்தபடி இருந்தார். நேற்று சாயுங்காலம் வந்து நின்றவரை “உக்காருண்ணா”…