தோட்டப்புற வாழ்க்கைப் போராட்டங்களைப் பேசும் கதைகள்

பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் நாட்டிலிருந்து சன்னஞ் சன்னமாய் கங்காணி திட்டத்தின் மூலம் சஞ்சிக்கூலிகளாக மலாயாவுக்குக் கொண்டுவரப்பட்டவர்களின் துயரங்கள் இன்னல்களை நம் எழுத்தாளர்கள் பல சிறுகதைகளில் பதிவு செய்திருக்கிறார்கள். மலாயாவின் முதல் சிறுகதை சிங்கப்பூரிலிருந்து சேது மகதூம் சாய்பு எழுதியதாக ஒரு பதிவு சொல்கிறது. அதனையே முதல் புள்ளியாக நாம் எடுத்துக் கொண்டாலும்,  1930 வெ.…

க்ளிங் க்ளிங் பெண்

அந்த மாலை, வாசற்படியில் அமர்ந்தபடி வெளிநோக்கி செம்மண் சாலையையும் திரும்பி அம்மாவின் முகத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும்போதுதான் சுமதி அந்த முடிவுக்கு வந்திருந்தாள். அவள் அம்மாவைப்போல் இருக்கப் போவதில்லை. ஒருபோதும் நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ள போவதில்லை. அம்மாவைப்போல் கணவனின் வருகையை எதிர்பார்த்து முட்டாள்தனமாகக் காத்துக்கொண்டிருக்கப் போவதில்லை; அவன் தன்னிடம் திரும்பி வந்துவிடுவான், குடும்பத்துடன் சேர்ந்துவிடுவான் என்று நம்பி…

சாம்ராஜ்யம்

மடங்கின வாக்கில் இருக்கும் பாட்டியின் கைகள் என்னை எட்டிப்பிடிக்கும் வேகத்தில் நீண்டன. நல்லவேளை. அம்மா எப்படி மெனக்கெட்டும் என் தலைமுடி நீண்ட சடை போடும் அளவுக்கு வளராமலேயே இருந்தது. இல்லையென்றால் மரக்கிளையில் மாட்டிக்கொண்ட கொம்புமான் போன்று என் சடை பாட்டியின் கையில் சிக்கியிருக்கும். பாட்டியைக் கொம்புமானைத் துரத்திவந்த சிறுத்தைப் புலியாக நினைத்துப் பார்த்தேன். அந்த வேளையிலும்…

நகர்வு

பிபிஆர் பிளட்சின் 15-வது மாடியில் உள்ள 10-ம் நம்பர் வீட்டில் ஒரே சத்தமும் சண்டையுமாக இருந்தது. வீட்டின் உள்ளே இருந்து ஒருஆண் குரல் பலமாக கத்திக் கொண்டிருந்தது. சண்டை நடந்து கொண்டிருக்கும் வாசற்படியை மலாய்கார குடும்பம் ஒன்று அமைதியாக கடந்து போனது. கீழ் மாடியில் குடியிருக்கும் சாந்தி சத்தம் கேட்டு வேகவேகமாக படியேறி மேலே வந்தாள்.…

பார்ச்: தரிசும் தாகமும்

கடுமையான ஆணாதிக்க வாழ்க்கை முறையை அனுபவித்து வரும் கிராமத்துப் பெண்கள், அவர்களின் ஆசா பாசங்களை சக   தோழிகளுடன் பகிர்ந்து கொண்டு எப்படிச்  சிரிக்கவும் முடிகிறது என்று தனக்குள் எழுந்த ஆச்சரிய உந்துதலே இயக்குனர் லீனா யாதவின் பார்ச் திரைப்படத்தின் உருவாக்கம். படத்தின் ஆரம்பத்தில் வரும் எழுத்தோட்டத்தில்  இயக்குனர், அவரிடம் தங்களின் வாழ்க்கை குறித்தத்  தகவல்களை நேர்மையாகப்…

நதியிடம் ஓர் விண்ணப்பம்

வரம்புகளையும்  குதிரைகளாக நினைத்துக்கொள்கிறோம் கஞ்சி கூழ்கூட அதன் மடியில் வைத்து உண்பதில் ஒரு பூரிப்பு. அதன் முதுகின்மேல் சேற்றில் புதைந்த கால் காவலாளிபோல் கவனிப்பாக இருக்கிறது நாலு மைல் தொலைவில் நதியென படுக்கும் நீர்த்தொட்டி எம்  வயலை தடவிச்செல்வதாக ஒரு எதிர்பார்ப்பு களைத்து வரும் நதி முன்வரிசையில் இருக்கும் வரப்பை நிறைத்துவிட்டு இரவுநேர மின்வெட்டாய் போனபின்…

மருந்தென்னும் மாயப்புள்ளி

மனப்பிணிக்கு மருந்துகொடுக்கக் கூடியவரிடம் வாங்கிவந்த மருந்துச்சீட்டுகள் அவை நோய்க்கூறுகளை துல்லியமாக உடல்புள்ளிகளில் கண்டறிந்தார்   ஒவ்வொரு புள்ளிகளிலும் ஒரு கதையை செருகச்சொல்லி தீவிரமாக வேறெதையோ தேடலானார்   உடன்பாடில்லையென்றாலும் கதைகளை கண்டறிந்துக்கொண்டிருந்தேன்   முதல்புள்ளி என் நெற்றிப்பொட்டில் இருப்பதாக எழுதிக்கொடுத்தார் சின்ன வயதில் யாரையோ கல்லெறிந்துவிட்டு ஓடிய கதையை அங்குச் செருகினேன் நெற்றிப் பொட்டு வலித்தது…

இரைகள்

நேற்றுத்தான், போனவனுக்கு, கல் நிறுத்தி காரியம் செய்து முடிந்திருந்தது. சீனன் கடைச் சாராயம் சல்லடைக் கண்ணாகி இதயத்தைத் துளைத்தெடுத்திருப்பது, ஆஸ்பத்திரிக்காரன், எக்ஸ்ரே எடுத்து, வெளிச்சம் போட்டுப் பார்த்துச் சொன்னபோதுதான் தெரிந்தது. சொல்லச் சொல்லக் கேட்காமல், வீட்டில் கிடந்ததையெல்லாம் எடுத்துப்போய், விற்றுக் குடித்தது, ஆஸ்பத்திரியில் ஒருமாதம் கிடத்திவைத்தது. அப்போதெல்லாம், கை ஒத்தாசைக்காக, கோயில் கூத்து மேடையில் அடைக்கலம்…

நாரின் மணம் 2 : தோலிருக்க சொளா முழுங்கி

மாமிசத்துண்டுடன் ஆற்றைக் கடந்த நாய், நீரில் நிழலைப்பார்த்துக் குரைத்து மாமிசத்துண்டை இழந்ததோ, சின்னஞ்சிறிய சுண்டெலி சிங்கத்திடம் குறும்பு செய்து மாட்டிக்கொண்டு,  உயிர்ப்பிச்சைக் கேட்டு தப்பிச்சென்றப்பின் சிங்கத்தை வலையிலிருந்து தப்பிக்க வேறொரு சந்தர்ப்பத்தில் உதவியதோ, நண்பர்களாக இருந்த தவளையும் சுண்டெலியும்  குளத்துக்காகச் சண்டையிட்டு இறந்ததால் பருந்துக்கு இறையானதோ கிரேக்க நாட்டைச் சேர்ந்த ஈசாப் எழுதிய கதைகள் மூலம்…

ஜெயமோகன், நாஞ்சில் நாடன், பவா செல்லதுரை மற்றும் சில நினைவுகள்

26.5.2017 – வெள்ளி முதலில்  நாஞ்சில் நாடன்தான் வந்திறங்கினார். அவருக்குக் கொச்சினிலிருந்து விமானம். ஜெயமோகனுக்குத் திருச்சிலிருந்து. அருண்மொழி அவர்கள் கடைசி நேரத்தில் வரமுடியாத சூழல். கண்களில் கிருமித்தொற்று.  நிச்சயம் மலேசிய விமான நிலையத்தில் தடுக்கப்பட்டுவிடுவார். ஜெயமோகன் வந்து சேரும் இடைவெளியில் நாஞ்சில் நாடனுக்கு ‘மீ கறி’ வாங்கிக்கொடுத்தேன். எனக்குப் பிடித்த சீன உணவு. அசலான சுவையில்…

இன்னொரு கிளை முளைக்கிறது

அது போன்ற மரத்தை நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள். நீங்கள் பார்த்த மரத்திற்கும் உங்களுக்கும் உள்ள இடைவெளியை என்னால் எளிதாக சொல்லிவிட முடியும். அப்படி சொல்லிச் செல்வதாலெல்லாம் ஏதும் நடந்துவிடாது என எனக்கு நன்றாகவே தெரியும். அந்த மரம் எப்போதும் தனித்தே தெரியும். அதன் தடிமனாகட்டும், இலைகளாகட்டும், அதில் தொங்கும் பிணங்களாகட்டும். முதன் முதலாக தூக்கில் தொங்கியது ஒரு…

அறை

“பத்மா க்கா… நாந்தான் பேசறேன். எனக்கு ஒரு உதவி வேணும். நான் இப்ப அவசரமா வெளிய போக வேண்டிய சூழல். தங்கச்சிக்கு ஏதோ பிரச்சினைபோல.” “ஏம்மா? என்ன பிரச்சினை? ஏன் இங்கிருந்துகிட்டே ரகசியமா போன் செய்யற?” “உங்ககிட்ட நேரில் பேசிட்டு வெளியாவதை யாரும் பார்த்தா உங்களுத்தான் சிக்கல். மற்றதை வந்து சொல்றேன். எப்படியும் 2 மணி…

நீ ஏன் மற்ற விலங்குகளைச் செதுக்கக் கூடாது? (ஆப்பிரிக்க மொழிபெயர்ப்பு சிறுகதை)

ஆப்பிரிக்கர்களுக்கு மட்டுமான அந்த மருத்துவமனை நுலைவாயிலின் நேர் எதிர் அமர்ந்து அவன் மர சிற்பங்களை செதுக்கிக் கொண்டிருக்கிறான். வேலைபாடுகள் முடிந்த ஒரு சில சிற்பங்கள் மட்டும் அவனைச் சுற்றி அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவன் வலது பக்கத்தில் அமர்ந்திருந்த ஓவியன் ஒருவனின் முழுமைப்பெற்ற ஓவியங்கள் மருத்துவமனை வேலிகள் நெடுக சாய்த்து வைக்கப்பட்டிருந்தன. அடர்த்தியான அச்சிறுநகரத்தில் கார்களின் பேரிரைச்சல்,…

எதைக் காவு கொடுப்பேன்

இலக்கியம் குறித்த பேச்சு எழும்போதெல்லாம் மலேசிய நவீன இலக்கியம் ஐம்பது ஆண்டுகள் கடந்தும் தீவிரத்தன்மையை அடையாமல் இருப்பது எதனால் என்கிற கேள்வி எழாமல் இருப்பதில்லை. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு கோணத்தில் இக்கேள்வி அணுகப்படுவது வழக்கம். வாசகர் இல்லாமை, பொருளாதாரம், கல்வித் தகுதி, அரசியல் கெடுபிடிகள், வெகுஜன இலக்கியங்களின் ஆதிக்கம், போலி இலக்கியவாதிகளின் அபத்தங்கள், அரசாங்க இன…

வல்லினம் குறுநாவல் பட்டறை : என் அனுபவம்

நவீன இலக்கிய படைப்பாளிகளில் என்னைப் பிரமிக்க வைக்கும் எழுத்தாளர்களில் முதன்மையானவர் திரு.ஜெயமோகன். அவரின் ‘மாடன் மோட்சம்’ சிறுகதையைப் படித்தபோது அவரது அசாத்திய கற்பனையைக் கண்டு வியந்தேன். அவர் எழுத்தாளர் நாஞ்சில் நாடனோடு சேர்ந்து இருநாள் பட்டறை நடத்தப்போகிறார் என அறிந்ததும் விரைந்து பதிந்து கொண்டேன். ஏற்கனவே கடந்த ஆண்டு வெறும் மூன்று மணி நேர சந்திப்பிலேயே…