தமிழர் அறிவியலும் சில சந்தேகங்களும்

Geocentric view: இவ்வரைப்படம் புவி மையக் கோட்பாடை குறிக்கிறது. அரிஸ்தோட்டல் ஊகித்த புவி மையக் கோட்பாடை இப்படமானது சித்தரிக்கிறது. மையப்பகுதியில் பூமியும், அதனைச் சுற்றியும் ஞாயிறும் இதர கோள்களும் வரையப்பட்டிருக்கின்றன. படத்தின் வெளிப்பகுதியில், தெய்வங்களின் வரைப்படம் இருப்பதையும் காணலாம்.

தொன்மங்களை (Myths) பொதுவாகக் கற்பனையின் உச்சத்தில் விரித்துரைக்கப்பட்ட கதைகள் என வரையறுத்துக் கூறுவர். காலங்களைக் கடந்து அவை எல்லா சமூகங்களிலும் தொடரப்பட்டு வருவது கண்கூடான ஒன்று. எச்சமயத்தைச் சார்ந்ததாக இருப்பினும் இக்கதைகளில் பொறிக்கப்பட்டிருக்கும் நிகழ்வுகளானது விண்ணுலகம் மற்றும் மண்ணுலகைச் சார்ந்தவையாக பெரும்பாலும் இருக்கும். விண்ணுலக கதைகள் பெருவாறாக கற்பனைக் கதைகள் எனக் கொள்ளப்பட்டாலும், மண்ணுலகம் சார்ந்த…

சிறுகதை : இந்தக் கதைக்கு மூன்று தலைப்புகள்

 1. இது திவ்யாவின் கதை திவ்யா என்றதும், கொஞ்சகாலத்திற்கு முன்புவரை ஊடகங்களிலும் நீதிமன்றம் மற்றும் காவல்துறை வட்டாரங்களிலும், அரசியல் கட்சிகளின் மேடைகளிலும் பரபரப்பாக பேசப்பட்ட திவ்யாதான் என்று நீங்களாக நினைத்துக்கொண்டு, அவள் கதைதான் ஊர் உலகத்துக்கே தெரியுமே என்று படிக்காமல் கடக்கக்கூடும். ஆனால் இது அவளது கதையல்ல அவசரகுடுக்கைகளே. ஏனென்றால் அந்தத் திவ்யாவினுடையது கதையல்ல, நம்…

மலேசிய சீன இலக்கியம்: எளிய அறிமுகம். – லீ சூ சீ

(சீனக் குடியேறிகள் முதல் மலேசிய சீனர்கள் வரையிலானவர்களின் படைப்புகள்.) முதலாவதாக, ‘சீனர் மலேசிய இலக்கியம்’ (Chinese Malaysian Literature) என்னும் சொல்லாடலே, தற்போது பரவலாக புழக்கத்தில் உள்ள ‘மலேசிய சீன இலக்கியம்’(Malaysian Chinese Literature) என்னும் சொல்லைவிட மிக பொருத்தமானது என்பது என் தனிப்பட்ட கருத்து. காரணம் சீன மலேசியர்களால் படைக்கப்படும் இலக்கியம் கருத்தாக்கங்களாலும், அடிப்படைக்…

நிலையாமையில் தினம் தினம்தான் ஏழை சாகிறான்

சுந்தர ராமசாமியின் எழுத்துகளை தீவிரமாக வாசித்துக்கொண்டிருந்தேன். சு.ரா-வின் ‘நா.பிச்சமூர்த்தியின் கலை – மரபும் மனித நேயமும்’ என்ற புத்தககம் கிடைத்தது. சுந்தர ராமசாமியின் பெயருக்காகத்தான் அந்த புத்தகத்தை வாங்கினேன்.  புத்தகத்தைப் படித்த போதுதான் நா. பிச்சமூர்த்தி குறித்தும் அவரது எழுத்து குறித்தும் தெரிந்துக் கொண்டேன். ஆனால் அவரின் கவிதைகளோ, சிறுகதைகளோ இங்கே  கிடைப்பது அரிதாக இருந்தது.…

பதிவு: ஜெயமோகனுடன் ஓர் இலக்கிய முகாம்

கடந்த 6 வருடங்களாகக் கூலிம் தியான ஆசிரமத்தில் இலக்கியம் சார்ந்து மட்டும் இயங்கி வரும் நவீன இலக்கிய சிந்தனைக்களம் பிரம்மானந்த சரஸ்வதி அவர்களின் தலைமையில் செயல்பட்டு வருகின்றது. பெரும்பாலும் சாமியார்கள் மலேசியாவில் சமயம், வியாபாரம் என மட்டுமே சமூகத்தை முன்னெடுப்பார்கள். ஆனால் பிரம்மானந்த சரவஸ்வதி அவர்கள் மிக முக்கியமான படைப்பாளியாக இலக்கிய வாசிப்பு சார்ந்து சமூகத்தையும்…

ப. சிங்காரத்தின் கடலுக்கு அப்பால் : காலம் கடந்து கண்டெடுக்கப்பட்ட வைரம்.

தமிழ் நாவல்களை தீவிரமாக தேடிப் படிக்கும் வசகர்கள் முதல் விமர்சகர்கள் வரை சிறந்த தமிழ் நாவல்கள் என்று குறிப்பிடும் பட்டியலில் கட்டாயம் இடம் பிடிப்பது பா. சிங்காரத்தின் கடலுக்கு அப்பாலும் புயலிலே ஒரு தோணியும் ஆகும். பா. சிங்காரம் இவ்விரண்டு படைப்புகளை மட்டுமே தமிழ் இலக்கிய உலகுக்கு விட்டுச் சென்றிருக்கிறார். இவ்விரண்டு நாவல்களின் தோற்றமும் அவை…

வெறி நாய்களுடன் விளையாடுதல் : குழந்தை மனமும் மனிதமும்

ம.நவீனின் கவிதைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். பத்து ஆண்டுகளுக்கு மேல் நவீனின் கவிதைகளுடன் எனக்கு பரிச்சயம் இருக்கிறது. தொடர்ந்து நான் கவிதைகளோடு பயணிப்பதற்கு நவீனும் நவீனுடைய கவிதைகளும் ஒரு முக்கிய காரணம் என்பதையும் நான் எப்போதும் உணர்ந்தே வந்திருக்கிறேன். அந்த வகையில் நவீனின் நட்புக்கு எனது அன்பினைத் தெரிவித்துக் கொண்டு இந்த தொகுப்பில் என்னைக் கவர்ந்த…

கே.பாலமுருகன் கவிதைகள்: நசுக்கப்பட்டவர்களின் அழகியல்.

நாவல், சிறுகதை, கட்டுரைகள் போன்ற இலக்கிய படைப்புகளை விமர்சிக்கும் அதே பாணியில் கவிதையையும் அணுக முடியும் என்பது எனக்கு சரியாக படவில்லை. காரணம் சிறந்த கவிதைகள் யாவுமே பன்முகத்தன்மை கொண்டனவாகவே உள்ளன. இதன் காரணமாகவே நமது பண்டை கவிதைகளும் கால மாற்றத்திற்கு ஏற்ப புதுப்புது விளக்கங்களை தந்த வண்ணம் உள்ளன. தமிழ் இலக்கிய மரபிலும் கவிதைகளுக்கு…

நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்: ஒரு பார்வை

ஒரு கவிதைப் படைப்பானது எப்போது உணர்வுகளை ஊடுருவிச் செல்கின்றதோ அப்போதே  அது ஒரு வெற்றிபெற்ற படைப்பாகிறது. அப்படியானதொரு படைப்பினை வெறுமனே கற்றுக் கொள்வதாலோ அல்லது அனுபவத்தாலோ உருவாக்கிவிடமுடியாது. ஒரு நிகழ்தலின் உண்மையை உணர்ந்து,  உணர்ச்சிகளால்  ஊடுருவி பார்க்கும் பார்வை யாருக்கு வாய்கிறதோ, அந்த பார்வையில்  ஒரு அழகியல் கலந்து உணர்வுகளை தளம்பச்செய்யும் வகையில் யாரால் வெளிவிட…

நான்கு கவிதை நூலும் நானும்

அண்மையில் நான்கு கவிதை நூல்கள் வாசிக்கக் கிடைத்தன. இந்தப் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்ட கவிதைகளில் எனது வாசிப்பு அனுபவங்களை நான் இங்கே பகிர்ந்துகொள்கிறேன். கே.பாலமுருகனின் தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள். இந்த நூலைத்தான் முதல் முதலில் வாசிக்கத்துவங்கினேன். ம.நவீனின் சிறப்பான முன்னுரையால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கவிதைப் புத்தகம், வாசிப்பில் மிகப்பெரிய மாற்றத்தைக்கொடுக்கக்கூடிய அற்புத கவிதை நூல் என்று சொன்னால்…

எம்.கே. குமார் கவிதைகள்

கிணற்றைத் தாண்டி கரையில் ஏறுகிறது நிலவு தொடந்துண்டு கொழுத்த தவளை இயலாமையில் நகர்கிறது.     ஒற்றைக்குரலில் ஓங்கிக் கதருகையில் செவியிழந்தவனின் விழிபோல விதிர்ச்சியாய்க் கிடக்கிறது இரவு.     அண்மையில் உதித்திருந்த உண்மை பழைய பொய்களின் எஞ்சியிருக்கும் சாம்பல்களுக்கிடையில் படாதபாடு படுகிறது. சாம்பலிலும் நழுவி ஓடுகிறது ஒரு துளி.     விஷத்தில் இறங்குதல்…

எஞ்சிய ரத்தம்

அறியாமையின் அடையாளமாய் நிற்கும் சிலுவையை   தன்னை நோக்கி தானே கேட்டுக்கொண்ட வார்த்தையை   எழப்போகும் மூன்றாம் நாளை   உணர்ந்தபடி உறைந்திருந்தது சிலுவையில் எஞ்சிய ரத்தம்    பா.பூபதி

வல்லினத்தின் குறும்படப் பட்டறை

குறும்பட இயக்கமும் அதன் வெளிபாடும் சமகால சமுதாயத்திற்குத் தேவையெனக் கருதி வல்லினம் ‘குறும்பட பட்டறை’யை இவ்வருடம் நடத்த திட்டமிட்டுள்ளது. மலேசிய இயக்குனர்களோடு தமிழக இயக்குனர்களின் பங்களிப்பும் இந்தப் பட்டறையில் இணையும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மலேசிய இயக்குனர்கள் சஞ்சை குமார் பெருமாள், பிரகாஷ் ராஜாராம், செந்தில் குமரன் முனியாண்டி போன்றோரின் வழிக்காட்டலுடன் நடைபெறும் இப்பட்டறையின் இறுதியில்…

வல்லினத்தின் புதிய முயற்சிகள்…புதிய உற்சாகம்…

கடந்த டிசம்பர் முதல் ‘வல்லினம்’ மலேசிய நாளிதழ்களில் ஓர் அபத்தத்தின் குறியீடாக வெளிப்படுத்தப்பட்டதை வாசகர்கள் அறிந்திருக்கலாம். ‘வல்லினம்’ ஆபாசத்தைத் திணிக்கிறது என்றும், ‘வல்லினம்’ மதத்தை அவமதிக்கிறது என்றும் , ‘வல்லினம்’ மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்கிறதென்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள். வேடிக்கை என்னவென்றால், தயாஜியின் ‘கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்’ என்ற சிறுகதை மற்றும் ம.நவீனின் ‘கடவுளின் மலம்’…

வெண்ணிற இரவுகள் ஒரு பார்வை: மலேசியத் தமிழ் சினிமாச்சூழலின் புதிய துவக்கம்

 கடந்த பல வருடங்களாகத் தொடர்ந்து உலக சினிமாக்களையும் மலேசிய சினிமாக்களையும் பார்த்துக் கவனித்தும் வருகிறேன் என்பதைவிட இப்படங்களை விமர்சிப்பதற்கு வேறேதும் விஷேசமான தகுதிகள் தேவையில்லை என்றே நினைக்கிறேன். ஒரு திரைப்படத்தை விமர்சிக்க திரைப்படத்தை இயக்கியவரால்தான் முடியும் என்றால் உலகில் அகிரா குரோசாவா தன் சக இயக்குனர்களின் திரைப்படங்களுக்குச் சினிமா விமர்சனம் எழுதியிருக்கக்கூடும் அல்லது வங் கார்…

ராமசாமி அவர்களுக்கு…

ராமசாமி அவர்களுக்கு,எனக்கு அனுப்பப்பட்ட டிராஃப்டில் உங்கள் பெயர்களைக் காணவில்லை. அது தவிர, ஈழத் தமிழர் தோழமைக் குரலில் பங்கு பெற்ற படைப்பாளிகள் பலர் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு , இந்த அறிக்கை சுற்றில் விடப்பட்டிருப்பதாகவும், அதில் நாங்கள் கையழுத்திடவில்லை என்றும் தெரிவித்திருந்ததால், அதை கருத்தில் எடுத்துக்கொண்டேன். இந்த காலகட்டத்தில், படப்பிடிப்பிற்காகவும், திரையிடலுக்காகவும் சுற்றுப்பயணத்தில் இருந்ததால்,…

தூப்புக்காரி : மலம் சுமக்கும் மனிதரின் மனம் கனக்கும்.

“அழுக்கு அது இயக்க நிலையின் ஆதாரம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அழுக்கும் கழிவும் உண்டு. அழுக்கும் கழிவும் இல்லையென்றால் அவன் வெறும் பிணம். சாக்கடையோரம் கடக்கும்போது மூக்கைப்பொத்தி, குமட்டலை வெளிப்படுத்தி தப்பித்தால் போதுமென்று ஓடும் பல மனிதர்கள் ஒருபுறம், ஆனால் சாக்கடையிலும் அழுக்கு சகதியிலும் காலூன்றி வாழ்க்கைப்பிழைப்பை நடத்தும் மேன்மக்கள் மறுபுறம்..” -மலர்வதியின் முன்னுரையிலிருந்து மக்களின் மொழியில்…

சொற்களைக் கொல்லும் கலையானது…

யார் அந்த மாயா? ஏன் அவள் மட்டும் இந்த உலகின் ஒழுங்கை எந்த முன்னறிவிப்புமின்றி களைத்துப் போடுகிறாள்? அவளுக்கு மட்டும் உலகம் ஏன் எந்தக் கொள்கையும் எந்த இலட்சியங்களும் இல்லாத ஒரு விளையாட்டுப் பொருளாக மாறிவிடுகின்றது? நவீனின் கவிதைகளில் வரும் ஒரு மாயாவாக மாறிவிடுவதைவிட இந்த உலகம் செய்த அனைத்துக் கவிதை கொலைகளையும் வேறெப்படியும் மறக்கவோ…