புறப்பாடு

அபத்தக் கனவுகளின் மாய உலகிலிருந்து தப்பி விழிப்புத் தட்டிய போது டிஜிட்டல் சுவர் கடிகாரத்தில் காலை 11.15 என்று காட்டியது. கண்ணாடி அணியாத கண்களினூடே அதையே சற்று நேரம் மங்கலான காட்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். காலையில் எப்போதும் அவனைத் தாக்கும் அபாரமான உத்வேகம் அன்றும் தாக்கியது. படுத்துக் கொண்டே பல எண்ணங்களை ஓட விட்டுக் கொண்டிருந்தான்.…

பெருந்தேவி கவிதைகள்

சில நாட்கள் இது நடக்கும் அதிகாலையிலிருந்தே அந்த நாள் உனக்கெதிராகச் சதி செய்வதாக ஒவ்வொரு நிமிடமும் உன்னை முறைத்துவிட்டு நகர்வதாக ஒவ்வொரு பார்வையும் உன் கழுத்தை நெரிக்கப்போவதாக உன் கைகளும் கால்களுமே உனக்கெதிரான சதியில் சேர்ந்துவிட்டதாக உன் நகங்கள் திடீரெனப் பெரிதாகி உன்னைக் கீறி ரத்த விளாறாக்கிவிடும் போல உன் கைகளை ஒன்றோடொன்று இறுக்கமாகக் கோர்த்தபடி…

ஓந்தி : புதிரான நனவிலியும் ஃபூகு மீனின் நஞ்சும்

சிங்கப்பூர் எழுத்தாளர் எம்.கே.குமார் அவர்களின் ‘ஓந்தி’ சிறுகதைத் தொகுப்பு ‘யாவரும்’ பதிப்பகத்தாரால்  2019ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டு வெளியாகி உள்ளது. இத்தொகுப்பில் எட்டு சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் இடம்பெற்றுள்ளன. எழுத்தாளர் சு.வேணுகோபாலின் விரிவான முன்னுரையைக் கொண்டிருக்கிற இத்தொகுப்பு ‘சிங்கப்பூர் இலக்கிய  விருது 2020’ தகுதிச் சுற்றில் தேர்வாகி உள்ளது. 2017ஆம் ஆண்டு எழுத்தாளர் மாலன் அவர்கள் தேசிய…

அழகுநிலாவின் ‘சங் கன்ச்சில்’ ஒரு பார்வை

‘ஆறஞ்சு’ (2015), என்ற  சிறுகதைத் தொகுப்பையும் “சிறுகாட்டுச் சுனை” (2018) என்ற சிங்கப்பூர் மரபுடைமை பற்றிய கட்டுரைத் தொகுதியையும் எழுதி வெளியிட்டுள்ளவர் எழுத்தாளர் அழகுநிலா. ‘கொண்டாம்மா கெண்டாமா’ (2016), ‘மெலிஸாவும் மெலயனும்’ (2016), ‘மெலிஸாவும் ஜப்பானிய மூதாட்டியும்’ (2018), ‘பா அங் பாவ்’ (2019) என குழந்தைகளுக்காக நான்கு படப் புத்தகங்களையும் அழகுநிலா எழுதியுள்ளார்: சிங்கப்பூர்…

இரண்டொழிய இன்னொன்று

அது 1998ஆம் ஆண்டின் பிற்பகுதி. தமிழ்நாட்டில் ஒரு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் பட்டயப் படிப்பை முடித்திருந்தேன். பட்டப் படிப்பைத் தொடர எண்ணியிருந்தேன். ஆனால் குறைந்த கட்டணப் பிரிவில் இடம் கிடைக்காமல் போனது. தேவையான அளவைக்காட்டிலும் சுமார் இரண்டு விழுக்காடு என்னுடைய மதிப்பெண் குறைவு. அதிகக் கட்டணம் செலுத்திப் படிக்கும் பிரிவில் சேரலாம். ஆனால் விருப்பமில்லை. அதனாலென்ன?…

நாவல் முகாமும் வல்லினம் இளம் எழுத்தாளர் விருது நிகழ்ச்சியும்

வணக்கம். வல்லினம் இலக்கியக்குழு 2020இன் முதல் நிகழ்ச்சியாக அக்டோபர் 17,18 ஆகிய நாட்களில் நாவல் இலக்கிய முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாம் தைப்பிங் நகரில் உள்ள (HOTEL GRAND BARON) விடுதியில் நடத்தப்படும். அதிக பட்சம் 20 பேர் மட்டுமே கலந்துகொள்ளத்தக்க விவாத அரங்காக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து வல்லினத்தின்…

வல்லினம்: இளம் எழுத்தாளர் விருது

முன்னுரை கடந்த பல ஆண்டுகளாக வல்லினம் இலக்கிய குழு, மலேசிய இளஞர்களை இலக்கியத்தின் பால் ஈர்க்கும் பொருட்டு பல நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. கோட்பாட்டு இலக்கிய பட்டறைகள், இலக்கிய முகாம்கள், கலந்துரையாடல் என பல நிகழ்ச்சிகளின் வழி மலேசிய இளைய சமூகத்திற்கு தீவிர இலக்கிய புரிதலை உருவாக்கவும் படைப்பாற்றல் திறனை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு…

விமர்சனம் ஏன் தேவையாகிறது: பொன்.கோகிலத்தின் ‘அகிலம் நீ’ நூலை முன்வைத்து

ஒரு புனைவிலக்கியம் குறித்து விமர்சனம் எழுத பல காரணங்கள் உள்ளன. படைப்பின் நுண்தளத்தைச் சுட்டிக்காட்டி அதன் வழி அப்படைப்பைப் பொது வாசகர்கள் மேலும் தீவிரமாக அறியும் வழிகளை உருவாக்குவது; அதிகரித்து வரும் நூல் பிரசுரங்களுக்கு மத்தியில் மேம்பட்ட படைப்புகளை அடையாளம் காட்டுவது; தத்துவம், வரலாறு என ஒரு படைப்பில் தொய்ந்துள்ள பிற அறிவுசார் தகவல்களை உரையாடல்களாக…

மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்

மலாயாவில் (இன்றைய மலேசியா, சிங்கப்பூர்) மொழிசார் வேர்களை ஆராயும்போது தவறாமல் உச்சரிக்கப்படும் இரு விடயங்கள்; (1) மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறை; (2) மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறை நூலகம். மலாயாப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பிரிவும் அதன் நூலகமும் உருவாவதில் பலரும் பலவகைகளில் செயல்பட்டிருந்தாலும்கூட அக்காலப்பகுதியில் முதன்மை ஊடகமாக…

பேய்கள் உலவும் உல்லாச உலகிதுவே

குட்டிச்சாத்தான், மோகினி பிசாசு, மண்டையோட்டுப் பேய், காட்டேரி இப்படி தமிழில் ஏராளமான பேய்கள் உள்ளன. அம்புலிமாமா நூல்களில் வேதாளம் குறித்துப் படித்ததுபோக வருடத்துக்கு எப்படியும் பழிவாங்கும் வகையறாக்களாகப் பத்து பேய்ப்படங்கள் திரையரங்குகளை நிரப்பிவிடுகின்றன. அக்கால விட்டாலாச்சாரியார் மாயாஜாலப்படங்கள் முதல் இன்றைய கொரிய-ஜப்பானிய பேய்ப்படங்கள் வரை தனிசந்தை மதிப்புக் கொண்டவையாக இருக்கின்றன. இடையிடையே திகிலூட்டும் நிகழ்ச்சிகள் என…

வெள்ளிக் காசு

மூன்று பேர் மட்டுமே வந்திருப்பது எரிச்சலாக்கியது. இது எப்போதும் நடப்பதுதான் என்றாலும் என்னால் கோபப்படாமல் இருக்க முடியவில்லை. என் வழக்கமான மாலை நேர குட்டித் தூக்கம் கெட்டிருப்பதால் லேசாகத் தலைவலியும் இருந்தது. கூடவே ராபியாவின் தொல்லை வேறு. அவள் வீட்டுக்கே செல்லவில்லை என காலையில் அணிந்த விளையாட்டு உடையும் அவள் சுமந்து வந்த புத்தக மூட்டையும்…

அனுபவ பாத்தியம்

டாக்ஸி, மன்னார்குடி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கிளம்பி, பத்துகிலோ மீட்டர் தூரம் தஞ்சாவூர் ரோட்டில் போனதும், புகளூர் கோயில் கோபுரம் தெரிந்தது. அருண் ஆவலுடன் கண்ணாடியை இறக்கிவிட்டு எட்டிப் பார்த்தான். “நம்ம கோயில் கோபுரம்தானே?” என்று கேட்டான். முன்பக்கம் உட்கார்ந்திருந்த அருணின் தந்தை ராஜகோபால் “ஆமாம்” என்றார். இன்னும் ஐந்துகிலோ மீட்டர் ஓடி, இடதுபுறம் பாலத்தடியில் திரும்பி,…

ஆதியோசை

என்னை நிரப்ப முயன்ற இருளுக்குள் மங்கலாக ஊடுருவியிருந்தது சிறிது வெளிச்சம். வடிவற்ற தேங்கிய குட்டையின் முகப்பில் ஊடுருவிய அந்த வெளிச்சம் இருளின் ஒரு கோணத்திலிருந்து மட்டும் என்னை மீட்டெடுத்துக் கொண்டிருந்தது. நான் குட்டையின் அடியாழத்தில் இருந்தேன் என்பதையன்றி வேறெந்த நினைவும் இல்லை; நான் நீந்தவுமில்லை மிதக்கவுமில்லை; திணறிக்கொண்டு மேலே வரும் முனைப்பேதும் என்னிடம் இருக்கவுமில்லை. அது…

துண்டு நிலம்

01 தடுப்பு முகாமிலிருந்து வீட்டிற்கு வந்து சரியாக முப்பது நாட்கள் கழிந்துவிட்டன. துடக்கு நாட்களில் சாமி அறையினுள் புழங்கும் பட படப்புடனே வீட்டினுள்  நடமாட முடிகிறது.  அம்மாவும், அப்பாவும் வேற்று மனிதர்கள் போலவும், இது அயலாரின் வீடுபோலவும், இங்கே நான் வழி தவறி வந்துவிட்டதாகவும் தோன்றியபடி இருக்கிறது. கண்ணாடிக் குவளையை பட்டுத் துணியால் துடைப்பதுபோல மிக…

வேணு வேட்ராயன் கவிதைகள்

2020இன் குமரகுருபரன் விருது பெற்ற கவிஞர் வேணு வேட்ராயன் கவிதைகள் இவை. தொழில்முறை மருத்துவரான இவர் தத்துவம், ஆன்மிகம் ஆகிய தளங்களில் ஈடுபாடு கொண்டவர்கள். இவரது ‘அலகில் அலகு’ எனும் கவிதை தொகுப்பு விருட்சம் வெளியீடாக வந்துள்ளது. வேணு வேட்ராயன் அவர்களுக்கு வல்லினத்தின் வாழ்த்துகள்.   (1) ஒடுங்குதல் நிகழ்கிறது. ஓவ்வொரு சாளரமாய் தன்னை சாத்திக்கொள்கிறது.…

மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

1 நீ சொன்னாய் அம்மா “உன் சோகங்களை யாரிடமும் சொல்லாதே துயர முகம் பார்த்துப் பேச தோன்றாது எவருக்கும்…” அம்மா… உண்மையிலேயே உற்சாகத்தில் இருக்கையில் மனம் உள்ளொடுங்கிகொள்கிறது நகைச்சுவை உணர்வு தடுத்துக்கொள்கிறது திறமையோ மிரட்டுகிறது கட்டுப்பாடுகள் பிளவுபடுகிறது ஆனால் சோகம்… சோகம்தான் நமக்கு நம்மை வெளிப்படுத்தி காட்டுகிறது மூலம்: Rachel Naomi Remen 2. அந்த…

நீர்ச்சுழலின் பாதை

இலக்கியத்தின் மகத்தான பணியாக வாழ்க்கைக்குத் தேவையான தன்னறத்தைப் போதித்தலை ஜெயமோகன் மீள மீளக் குறிப்பிட்டிருக்கின்றார். உலகின் சரிபாதி மக்கள் தத்தம் இல்லங்களில் உறைந்து இயல்பு வாழ்வு கெட்டு இருக்கும் கொரோனா காலத்துச் சூழலில் வாழ்வு மீதான நம்பிக்கையையும் அறத்தையும் வலியுறுத்துவது இலக்கியம் ஆற்ற வேண்டிய மிக முக்கியமான பணியாக இருக்கிறது. அத்தகைய சூழலில் ஜெயமோகன் நாள்தோறும்…

அந்திமழை சிறுகதை சிறப்பிதழ்: ஒரு வாசக பார்வை

கொரோனா காலத்திலும் எந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளுமின்றி இலக்கிய வாசகர்ளுக்கான பயணங்கள் மட்டும் இன்னும் திறந்தே கிடக்கின்றன. ஒவ்வொரு நாளும் புதிய நிலத்தில், புதிய மனிதர்களோடு, பல்வேறு அனுபவங்களை, கண்டடைதல்களை வெவ்வேறு திசைகளில் இருந்து இலக்கியங்கள் வழங்குகின்றன. இலக்கிய வாசகர்கள் பூட்டிய அறைக்குள்ளிருந்தே உலகை தரிசிக்கக்கூடியவர்கள். அப்படி என் வாசிப்பை அர்த்தப்படுத்திய படைப்புகளில் மே மாத அந்திமழை…

பேய்ச்சி: அன்னையின் பேய்மையும் அதீதத்தின் திரிபும்

‘பேய்ச்சி’ நாவலைப் பற்றிய எனது வாசிப்பனுபவத்தை எழுதுவதற்கு முன்பு பேச்சியைப் பற்றிய எனது அறிதல்களையும் அனுபவங்களையும் முதலில் எழுத விரும்புகிறேன். என்னுடைய சிறுவயதில் அதிர்ச்சி அளிக்கக்கூடிய அந்தச் சம்பவத்தைப் பார்த்தேன். அம்மாச்சி வீட்டிலிருந்த நாய் ஒன்று குட்டிகள் ஈனுவதைச் சிறுவர்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தோம். திடீரென்று நாங்கள் எதிர்பார்க்காத வகையில் நாய் தனது குட்டி ஒன்றைச் சாப்பிட…