சொல்லிய கதையும் சொல்லாத கலையும்

மலேசிய இலக்கியத்தின் புதிய திசைகளைக் கண்டடைய, அதன் புதிய எல்லைகளைத் தொட்டுவிட பெரும் அடர்காட்டை அழித்துக் கொண்டு புதிய பாதைகளைத் திறந்து வைக்கும் ம.நவீனை ‘சாளரங்களைத் திறந்து வைக்கும் கலைஞன்’ என சு.வேணுகோபால் அவரது முன்னுரையில் குறிப்பிடுகிறார். அவரின் எழுத்துகளே அவரை அறிவதற்கான மிகப் பெரிய சாளரமுமாகிறது. சமூகத்தின் பார்வைக்கு ஏற்ப தனது பிம்பத்தை நிறுவ…

மனிதனும் மிருகமுமான கடவுள்

தேர்ந்தெடுத்த நூல்களினை வாசிக்கும் பழக்கமுள்ளோருக்கு மா.சண்முகசிவா சிறுகதைத் தொகுப்பினை உள்வாங்கி கொள்ள ஏதுவாக இருக்கும். அதற்கு அவரின் எளிய உரைநடை சொல்லாடலே காரணமாகும். மா.சண்முகசிவா சிறுகதைத் தொகுப்பை வாசிக்கையில் இத்தொகுப்பில் தற்கால சமூகப் பிரச்சனைகளின் ஊடே வாழ்வாதார சிக்கலை எதிர்நோக்கிய விளிம்புநிலை மக்களின் அவலநிலையினை மையமாகக் கொண்டுள்ளது எனப் புரிந்துகொள்ளமுடியும். கதையில் வரும் மையக் கதாபாத்திரங்கள்…

இலட்சுமணக்கோடுகள்

இராமயணத்தில் சீதையைக் கவர்வதற்காக இராவணன் மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிக்க இலட்சுமணன் கோடு ஒன்றை வரைந்து அதற்குள்ளே சீதையை இருக்கச் சொன்னதாக தொன்மக்கதை இருக்கிறது. அப்படியாகப் பெண்களைப் பல காரணங்களுக்காக நிரந்தரமாகக் கோடு போட்டு வைத்திருக்கிறது சமூகம். எப்பொழுதுமே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவும் நிகழ்த்திக் கொள்ளவும் கலை கட்டற்ற வெளியை அளிக்கிறது. அப்படியாகத் திரைக்கலை அளித்திருக்கும் வெளியைப்…

காலத்தால் நிரப்பப்பட்ட இடைவெளி

‘அவரவர் வெளி’ எனும் நூல், அ.பாண்டியன் அவர்களது மூன்றாவது நூல். வல்லினம் பதிப்பகமும் யாவரும் பதிப்பகமும் இணைந்து பதிப்பித்த நூல். வல்லினத்தின் பத்தாவது கலை இலக்கிய விழாவில் வெளியீடு கண்டது. மலேசிய தமிழ் இலக்கியச் சூழலில் படைப்பிலக்கியங்கள் குறித்த விமர்சன நூல்கள் வெளிவருவது மிகவும் குறைவு. அதன் விளைவு, எழுதப்படுவது எல்லாமே இலக்கியம் என ஏற்றுக்கொள்ளப்பட்டு…

நாரின் மணம்: கடக்க முடியாத காலம்

ம.நவீனின் பல்வேறு புனைவுகளை வாசித்துள்ளேன். அவ்வகையில் கவிதை மொழி வேறு விதமாகவும், சிறுகதை நடை மற்றொரு விதமாகவும் இருக்கும். இதில் பத்தி எழுத்து முற்றிலும் மாறுபட்டது என ‘நாரின் மணம்’ நூலின் வழி அறிந்தேன். மிக எளிமையான எழுத்து நடையில் இன்பம், துன்பம், நடிப்பு, நக்கல், அதிர்ச்சி, ஆச்சரியம் போன்ற பல்வேறு உணர்வுகளை கலந்து சுவாரசியமாகப்…

மூன்று நாள் இலக்கிய முகாம்

வல்லினம் இலக்கியக்குழு மற்றும் கூலிமில் இயங்கும் நவீன இலக்கியக் களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் மூன்று நாள் இலக்கிய முகாம் டிசம்பர் 20,21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் கூலிமில் அமைந்துள்ள பிரம்ம வித்யாரண்ய ஆசிரமத்தில் நடைபெறுகிறது. இதில் தமிழகத்திலிருந்து எழுத்தாளர் ஜெயமோகன்,  எழுத்தாளர் சு.வேணுகோபால் மற்றும் சாம்ராஜ் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். சுமார் 100 பேருக்கு மட்டுமே…

விஜிப்ரியா கவிதைகள்

அப்பாவின் வீடு கல்யாணத்திற்கு பிறகான அப்பா என்ன செய்வார்? வீட்டிற்கு வரும்போது வாஞ்சையுடன் பைகளை வாங்கி கொள்வாரா? எனக்கு பிடிக்குமென பக்குவமாக சமையல் செய்வாரா? வயிற்று பிள்ளைகாரியான என் கால்களை முன்புபோல பிடித்து விடுவாரா? பிள்ளையின் உச்சி முகர்ந்து முத்தம் வைத்திருப்பாரா? வலியால் முனகும் போது, தலைமேல் கை வைத்துவிடுவாரா? எனக்காய் படுக்கையை தட்டி தயார்…

“இலக்கியத்திற்கும் கல்வியாளர்களுக்கும் தொடர்பில்லை” – ஶ்ரீதர்ரங்கராஜ்

மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர் ஶ்ரீதர்ரங்கராஜ். மலேசியப்பெண்ணைத் திருமணம் செய்து கடந்த 5 வருடங்களாக மலேசியாவில் கிள்ளான் எனும் நகரில் வாழ்ந்து வருகிறார். தமிழகத்தின் வலசை, கல்குதிரை போன்ற சிற்றிதழ்களில் இயங்கியுள்ளதோடு வல்லினம் இதழிலும் சுமார் ஓர் ஆண்டுகள் பொறுப்பாசிரியாகப் பங்காற்றியுள்ளார். பயணம் (கட்டுரை), ஹருகி முரகாமியின் சிறுகதைகளின் இரு மொழிப்பெயர்ப்புத் தொகுப்புகள் (கினோ, நீர்க்கோழி) போன்ற…

SAKA: பழிவாங்கும் குலதெய்வங்கள்

சில வருடங்களுக்கு முன்னர் நான் பணியாற்றிய பள்ளிக்கு புதிதாக ஓர் ஆசிரியர் மாற்றலாகி வந்தார். கம்பீரமான தோற்றத்துடன் இனிமையாகப் பழகக்கூடியவர். அவர் மாநில சுல்தானின் தூரத்து உறவினர் என்று நண்பர்கள் கூறினர். அவரின் தோற்றம் அரசகுலத்தவர் என்பதை நிரூபிக்கும் வகையில்தான் இருந்தது. சில ஆண்டுகள் பள்ளியில் சிறப்பாகப் பணியாற்றிய அவர் திடீர் என்று நோய்வாய்ப்பட்டார். தொடர்ந்து…

ஸுனார் : அங்கதத்தைக் கலையாக்கிய ஆளுமை

கேலிச் சித்திரக் கலை ஒரு செய்தியை அல்லது தகவலை ஓவியம் வழி நகைச்சுவையுடன் மற்றவர்களுக்குக்கொண்டு செல்வதாகப் புரிந்துகொள்ளலாம். கோமாளி இதழுக்குப் பிறகு மலேசியத் தமிழ் இதழியல், பதிப்புச் சூழலில் கேலிச் சித்திரக் கலைஞர்கள் அரிதாகிவிட்ட சூழலைதான் தற்போது பார்க்கமுடிகிறது. அதிலும், சமூகப் பிரச்சனைகளையும் அரசியல் சிக்கல்களையும் கேலிச் சித்திரம் வழி பேசும் தமிழ்க் கலைஞர்கள் கடந்த…

புங் ஜாகோய்: குன்றும் குறுங்குழுவும்

சரவாக் பல இரகசியங்களைத் தன்னகத்தே வைத்து அங்கு வாழ்வோருக்கும் வருகை தரும் பயணிகளுக்கும் ஒரு விந்தையான நிலமாகவே இருந்து வருகிறது. சரவாக், சரவாக் என அடையாளம் பெறுவதற்கு முன்னர், அதாவது 1963 மலேசிய ஒப்பந்தத்திற்கு முன்பு (Perjanjian Malysia 1963) முன் போர்னியோ நிலப்பரப்பாக இருந்தது. இன்றும் உலகின் பல மூலைகளிலிருந்தும் இங்கு வரும் மக்கள்…

மலாய் புராணக் கதைகள் ஓர் அறிமுகம்

எல்லாத் தொன்ம நிலங்கள் போலவே மலாய் மொழி புழங்கிய தீவுக்கூட்டங்களில் வாழ்ந்த எளிய மக்கள் மத்தியில் எழுத்து அறிமுகமாகாத காலத்தில் வாய்மொழியாகவே பல கதைகள் உருவாகி உலவி வந்தன. இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தென் தாய்லாந்து, பிலிப்பீன்ஸ், புருணை, போன்ற நாடுகளை இந்த மலாய் தீவுக்கூட்டங்களில் உள்ளடக்கலாம். மன்னர்களுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் நிலப்பிரபுகளுக்கும் இருந்த…

விலங்குகள் சொல்லும் கதைகள்

‘Folklore’ எனும் சொல் 1864 ஆம் ஆண்டு ஜான் வில்லியம் தாமஸ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.தமிழில் நாட்டுப்புறவியல் என்பது இதன் சொல்லாட்சியாக இருக்கிறது.நாட்டுப்புறவியலில் பல வகைமைகள் இருந்தாலும் அதில் நமக்கு மிகவும் பரீட்சயமானது நாட்டுப்புறக் கதைகளாகும். நாட்டுப்புறக் கதைகள்(Folktales) அநாமதேயமாக உருவாக்கப்பட்டவை.அவை வாய்மொழியாக தொடர்ந்து பல தலைமுறைகளுக்கு கடத்தப்படுகின்றன. அவை குறிப்பிட்ட கலாச்சாரத்திற்குள் மக்களால் பாதுகாக்கப்படுகின்றன.அவை ஒரு சமூகத்தின்…

கார்மலின் (கொங்கணி நாவல்): ஒரு பார்வை

இந்திய நிலப்பரப்பின் அறிமுகம் கிடைத்தவர்களுக்கு கோவா காணவேண்டிய இடமென மனதின்  ஆழ்கனவுகளுள் ஒன்றாய் அமைந்திருக்கும். கோவா என்றதும் பெரும்பாலானவர்களுக்கு நினைவில் எழுவது கடற்கரையும் மதுவகைகளும் கொண்டாட்டங்களுமாக இருக்கும். பண்பாடு அறிதலுள்ளோர் போர்ச்சுகீசிய வழித்தடங்களைக் காண விருப்பப்படுவர். ஆனால் அந்நிலம் தனக்கென ஒரு தனிமொழியை கொண்டுள்ளது என்பதை அங்கு சென்று வந்த பெரும்பாலானோர் அறிந்திருக்கமாட்டார்கள். வடக்கே குஜராத்தியும்…

பூனைகள் நகரம் : ஹருகி முரகாமி சிறுகதைகள்

நான்கு கால்களையும் பக்கவாட்டில் வாகாகப் பரப்பிக் கொண்டு முன்கால்கள் இரண்டின் இடையில் முகம் சாய்த்துத் தன்னையே திரும்ப பார்த்துக்கொண்டிருக்கும் பூனைகள் சாலைகளில் அகப்படும்.  அவற்றுள் சில அரிதாக வாலையும் அருகில் வைத்துக்கொண்டு அரை விழிப்பில் இருக்கும். தான் படைத்துக்கொண்ட அல்லது தனக்கு விதிக்கப்பட்டிருக்கிற உலகில்  உளம் தோய்ந்து வாழ முடியாத தனிமையும் வெறுமையும் அதிலிருப்பதாய்த் தோன்றும்.…

ஹெமிங் வே: வாழ்வெனும் கடலுக்கு அஞ்சிய கிழவன்

ஊட்டி முகாமில் கலந்துகொண்டு திரும்பியபின் பல புதிய படைப்பாளிகள் எனக்கு அறிமுகமானார்கள். அம்முகாமுக்காக உருவாக்கப்பட்ட தளத்தில் இருந்த பல கதைகளை ஆர்வத்துடன் வாசித்தேன். அதில்தான் ஹெமிங் வே எனும் படைப்பாளி எனக்கு அறிமுகமானார். தொடர்ந்து அவர் எழுதிய கிழவனும் கடலும் என்ற நோபல் பரிசு பெற்ற நாவலின் குறும்படத்தைத் தேடிப் பார்த்தேன். அவர் குறித்து விரிவாக…

அவிழாத மொட்டுகள்

உங்கள் உடலைத் தாங்கி நிற்கும் பாதங்களின் பரப்பளவு ஒருநாள் சிறுத்துவிடுவதைப் பற்றி என்றாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? அல்லது கால் உடையாமல், ஊனப்படாமல் ஒரே இடத்தில் வாழ்க்கை முழுவதிலும் அமர்ந்துகொண்டு,சிறு வேலைக்குக்கூட அடுத்தவருடைய உதவியை நாடி வாழ்வதைப் பற்றி எண்ணியதுண்டா? இவையெல்லாவற்றையும் ஒரு குறிப்பிட்ட சமூகப் பெண்கள் வலிந்து ஏற்றுக்கொண்டார்கள் என்பதும் அது ஒரு அலங்காரமாக அவர்கள்…