யாழ்ப்பாணத்தில் வல்லினம் 100

வல்லினம் இலக்கியக் குழு மேற்கொண்ட இலங்கை இலக்கியப் பயணத்தில் யாழ்ப்பாண நகரத்திலுள்ள நல்லூரில் வல்லினம்100 நூல் அறிமுகமும் கலந்துரையாடலும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் வல்லினக் குழுவினரும் யாழ்ப்பாண வட்டார வாசகர்களும் கலந்து கொண்டு வல்லினம் 100-இல் வெளிவந்த படைப்புகளைத் தொட்டுப் பேசி கலந்துரையாடினர். முதலாவதாக கிருஷ்ணன் நிகழ்ச்சியின் நெறியாளராகப் பொறுப்பேற்று வல்லினத்தின் தற்கால இலக்கிய நடவடிக்கைகளைத் தொட்டு…

கவிஞர் கருணாகரனுடன் ஒரு நாள்

இலங்கை பயணத்தின் மூன்றாம் நாள் திரிகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் வழியில் கவிஞர் கருணாகரனைச் சந்திப்பதாக நவீன் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் வழியில் பல வரலாற்றுத் தடங்களையும் பார்த்துக் கொண்டு சென்றதால் நேரம் போதவில்லை. முல்லைத்தீவு இறுதிப்போரின் சிதிலங்களும், அவற்றுக்கு எங்கள் பயணத்தில் முழுமையாக பங்கெடுத்துக் கொண்ட ஓட்டுனர் நண்பர் திலிப் கூறிய விளக்கங்களும் மனதை…

கொழும்பில் வல்லினம் 100

கொழும்புக்கு வந்து சேர இரவு மணி 11 ஆகியிருந்தது. யாழ்ப்பணத்திலிருந்து தொடங்கிய பயணம் என்பதால் உடல் கடும் சோர்வடைந்திருந்தது. அன்றிரவு தங்குவதற்கான இடம் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மறுநாள் காலை 11மணிக்கு ‘வல்லினம் 100’ அறிமுக நிகழ்ச்சி இருப்பதாக நவீன் ஏற்கனவே சொல்லியிருந்தார். பயணத்தின் போது கண்டி பேராதனை, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய…

சு.வேணுகோபால் பதில்கள் – பகுதி 2

கேள்வி 1: நீங்கள் எழுத்தாளராக யார் மூலம் அல்லது எதன் மூலம் வந்தீர்கள் சர்? சரியாகக் கேட்பதென்றால் எந்தப்பள்ளி? ஜெயமோகன் சு.ரா பள்ளியிலிருந்து வந்தது போல. கேள்வி 2 : விமர்சனங்களை நீங்கள் எவ்வாறு எதிர்க்கொள்கிறீர்கள்? விமர்சனம் மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டா? பாலன், மலேசியா அன்புடன் பாலனுக்கு இந்தக் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்வதென்றால்…

மண்புழுக்கள் : மூதாதையர்களின் உயிரணுக்கள்

வழக்கமாக நம் நாட்டு படைப்பாளிகளால்  எழுதப்படும் படைப்புகளில், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அக்காலக்கட்ட தமிழக தாக்கங்கள் ஓரளவேனும் இருந்துவிடுகிறது. திராவிட எழுத்தின் எழுச்சி மொழி, மு.வ மொழி என ஒப்பிட்டுப்பார்த்து இந்த நிலைப்பாட்டை அறிய முடியும். அதற்கான காரணம் வாசிப்பை மட்டுமே முதன்மையாகக் கொண்டு படைப்பாளி இயங்குவதாகவும் இருக்கலாம். ஒருபடைப்பு அதன் அசல் தன்மை குன்றாமல் இருக்க…

446 A

பாஸ்கர் சார் பென்சால்டிஹைடு உருவாக்க வினையை எழுதி முடித்த போது மணி சரியாக 4.34. காலாண்டுத் தேர்வுகள் முடிந்திருந்ததால் வகுப்புகள் சற்று தளர்வாகவே நடந்தன. ஐந்து இருபது வரை நீடிக்கும் சிறப்பு வகுப்புகள் சில தினங்களாக இல்லை. இருந்தும் நரேனால் 446A-ஐ பிடிக்க முடிவதில்லை. மூன்று நாட்களாக ஏதோவொன்று அந்தப் பேருந்தைப் பிடிக்க விடாமல் தவறச்செய்து…

ஆணிவேர்களும் நீர்ப்பாசிகளும்: சிங்கை தமிழ் இலக்கியம் – பகுதி 3

இளம் தலைமுறையின் இடைக்கால ஈடுபாடு ரெ.பாண்டியன், விஜயன், அரவிந்தன், ராஜசேகர், ராஜாராம், சூரியரத்னா, பாலமலர் போன்றவர்களால் 1988ல் தொடங்கப்பட்ட வாசகர் வட்டம் நவீன இலக்கிய வாசிப்பு, விமர்சனத் தேடலுக்குக் களம் அமைத்தது. இதே காலகட்டத்தில் கல்வி அமைச்சின் பாடத்திட்ட வரைவுப் பிரிவின் தமிழ்ப் பகுதியும் உயர்நிலைப் பள்ளி மூத்த தமிழாசிரியர் மத்திய குழுவும் இணைந்து உயர்நிலைப்…

இலங்கை வாசகர்களும் இலக்கிய வாசகர்களும்

எழுத்தாளர் ஜெயமோகனின் தளத்தில் ‘இலங்கை,நவீன்‘ எனும் குறிப்பை வாசித்தபோதே அதை ஒட்டிய சர்ச்சை எழும் என அறிந்ததுதான். ஒரு பயணக்குறிப்பு அதை வாசிக்கும் நபர்களின் தேடலில் / தேவையில் இருந்து உள்வாங்கப்படுகிறது. உண்மையில் என் பயணக்குறிப்புகள்  எதை ஒட்டியும் ஆழமான பதிவொன்றைச் செய்யவில்லை. அவை அப்போதைய எனது மனப்பதிவின் புகைப்படங்கள். ஜெயமோகன் பிரதானமாக ஒரு நிலத்தின்…

ஏன் சடக்கு?

‘சடக்கு’ இணையத்தளம் மலேசியத் தமிழ் இலக்கிய உலகின் முகத்தை படங்கள், துண்டு பிரசுரங்கள், கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள் வாயிலாக ஆவணப்படுத்தி பொது பார்வைக்கும் பயன்பாட்டுக்கும் கொண்டு செல்லும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது என்பது ஒருவகை புரிதல். ஆவணப்படுத்துதல் எனும் பதத்தைவிட  காப்பகப்படுத்துதல் எனும் பதம்தான் இவ்விணையத்தள உருவாக்கத்திற்கு மிகப் பொருத்தமான பதமாக இருக்கும். ஆவணப்படுத்துதல் என்பது பயன்மதிப்புமிக்க…

சு. வேணுகோபால் பதில்கள்

ஐயா, நான் உங்கள் சிறுகதைகளை வாசித்துள்ளேன். பெரும்பாலான கதைகள் எனக்குப் புரிவதில்லை. ஆனால் நவீன இலக்கியத்தில் பலர் கதைகளை வாசித்து விளங்கிக்கொண்டுள்ளேன். தாங்கள் எவ்வகையில் மற்ற எழுத்தாளர்களுடன் மாறுபடுகிறீர்கள்? மித்ரன், சென்னை அன்புடன் மித்திரனுக்கு, உங்கள் கேள்வியில் இரண்டு விசயங்களை முன் வைத்துள்ளீர்கள். பிறர் எழுதுகிற நவீன கதைகள் புரிந்து கொள்ளும் படியாக இருக்கின்றன. என்…

“விரிந்த வாழ்வின் விசித்திர அனுபவங்களே எனக்கான கதைகள்” – கே.ராஜகோபால்

குறும்படங்களுக்கான போட்டி அறிவிப்பொன்றில்தான் கே.ராஜகோபால் எனும் இயக்குனரை முதன்முறையாக அறிந்தேன். நிறைவு விழாவின் சிறப்பு விருந்தினர் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவரைப்பற்றி அறிந்துகொள்ள மேலும் தேடியபோது நிறைய குறும்படங்களையும் ஒரு திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார் என்றும் அறிந்தேன். அத்திரைப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்த நொடியில் அவர் எத்தனை முக்கிய படைப்பாளி என்பதை உணர முடிந்தது. அப்படம் “மஞ்சள் பறவை”…

இஸ்ரேலிய எழுத்தாளர் எட்கர் கரிட் (Etger Keret) சிறுகதைகள்

உன்னுடையவன் – Your Man என்னைவிட்டு பிரியப்போவதாக எபிகாயில் கூறியபோது நான் அதிர்ச்சியில் இருந்தேன். வாடகை வண்டி அவளுடைய இடத்தில் தான் வண்டியை நிறுத்திவிட்டிருந்தது. அவள் காரிலிருந்து இறங்கி அருகிலிருந்த நடைபாதையில் நின்றவாறு இதற்குமேல் என்னைத் தேடி வர வேண்டாம் என்றாள், இதைப்பற்றி தொடர்ந்து பேசவும் விரும்பவில்லை என்றாள். இதெல்லாம்விட மிக முக்கியமாக என்னிடமிருந்து எந்த…

தே-ஓ கோசோங்

நேற்றிரவு படுக்கப்போகும்போது இருந்த தலைவலி இன்று காலையில் எழுந்திருக்கும்போதும் தொடர்ந்தது. இரவில் மூன்று-நான்கு முறை எழுந்து சிறுநீர் கழிக்கச்சென்றதில் சரியான உறக்கமில்லை. உறக்கத்தில் மூழ்கத்தொடங்கும் வேளையில் அல்லது உறக்கம் பிடித்த சிலநிமிடங்களில் மீண்டும் உந்துதல் தோன்ற எழுந்து கழிவறைக்குச் செல்ல வேண்டியிருந்தது. எனவே படுக்கையிலிருந்து எழும்போதே உறக்கச்சடவும் உடன் சேர்ந்துகொண்டது. வலப்புறப் பாதவிரல் நுனிகளில் லேசான…

சடக்கு வந்த வழி

ஆவணப்படங்களை இயக்கிக்கொண்டிருந்த சமயம் ஒரு பெரும் போதாமையை உணர்ந்தேன். ஒவ்வொரு முறையும் படப்பிடிப்பில் பங்குபெறும் எழுத்தாளர்கள் தங்களுக்கு முந்தைய தலைமுறை ஆளுமைகள் குறித்து கூறும்போது அவ்வாளுமைகளின் படங்கள் கிடைக்காமல் திணறுவோம். ஆவணப்பட செறிவாக்கப்பணியில் அந்தக் குறிப்பிட்ட ஆளுமைகளின் படத்தை இணைக்காமல் மனம் நிறைவு கொள்ளாது. இது ஒரு ஊனமாக மனதில் உறுத்திக்கொண்டிருந்த சமயம்தான் கோ.சாரங்கபாணிக்கும் இதே…

சித்துராஜ் பொன்ராஜ் கவிதைகள்

அபிப்பிராய பேதங்கள் என் அபிப்பிராயங்கள் அனைத்தையும் வழவழப்பான கூழாங்கற்களாக்கி வீட்டு வரவேற்பறையில் உள்ள மீன் தொட்டியில் போட்டு வைத்திருந்தேன். ‘நல்லவிலைக்கு வந்தால் ஒரு கடலும் வாங்கிவிடலாம்’ என்றாள் லலிதா. இன்று ஞாயிற்றுக்கிழமை இருவரும் கடல் விற்கும் கடைக்குப் போனோம். ’மாதாந்திர வாடகைக்கு பௌர்ணமி அலைகள் சகிதம் சமுத்திரமே கிடைக்கும்’ என்றான் கடல் விற்பவன். சமுத்திரம் வாங்கி…

ஆணிவேர்களும் நீர்ப்பாசிகளும்: சிங்கை தமிழ் இலக்கியம் – பகுதி 2

மலாய், சீன இலக்கியங்களின் எழுச்சியும் தனித்து வளர்ந்த தமிழ் இலக்கியமும் இக்காலகட்டத்தில்தான், (1950களில்) மலாய், சீன இலக்கியங்களிலும் மறுமலர்ச்சி ஏற்பட்டது. சீன இலக்கியத்தில் சமூகம், கலாசாரம் சார்ந்து இரண்டு முக்கிய மாற்றங்கள் நிகழ்கின்றன என்கிறார் டாக்டர் டான் சீ லே (Chee Lay, Tan, 2015). முதலாவது மலாயா சீன இலக்கியத்தின் தனித்தன்மையை வளர்க்கும் நன்யாங்…

பேச்சி

“நீங்க பாத்தது உண்மையில பேச்சியம்மனையா? கதைய அப்படி முடிச்சா லாஜிக் இடிக்கும் டாட்.” இதோடு நூறாவது தடவை கேட்டிருப்பான். அதைக் கதை என செல்வம் சொல்வதே எனக்குக் கடும் கோபத்தை மூட்டியது. நான் ஒன்றும் பேசவில்லை. வார்த்தைகள் ஏதும் தடித்துவிட்டால் குலதெய்வத்தைப் பற்றிய எந்தப் பதிவும் இல்லாமல் போய்விடலாம். என்னைப்போலவே கோபக்காரன். நிமிர்ந்து பொன்னியின் படத்தைப்…

ராஜேஷ் ஜீவா கவிதைகள்

நன்னெஞ்சு விரல்மைதுனம் ஒவ்வொன்றிற்கும் அவள் கார்கூந்தலில் வெள்ளிக்கம்பிகள் உதிக்கின்றன சத்துடானிக் மூலிகைக்குளியல் அக்குபங்சர் ஆராஹீலிங் என சகலத்திற்கும் தலையை ஒப்புக்கொடுத்த பின்னரும் கணக்கு மட்டும் தீர்ந்தபாடில்லை நேர்ச்சைகளும் குறைந்தபாடில்லை அவ்வையென சகதோழிகள் சீண்டிச் சிரிக்கும் சமயங்களிலும் அவளுக்கு சங்கடங்கள் நேர்ந்ததில்லை கண்ணைத் திறந்த ஆட்டுக்குட்டி மலங்கமலங்க விழிப்பது போல குழலில்  பெருகும் நரைகள் குறித்து பெற்ற…