இறுதிச்சுற்றுக்கான படைப்புகள்

வல்லினம் இவ்வாண்டு தொடங்கியப் படைப்புகளுக்கான பரிசுத்திட்டம் ஏப்ரல் 2017 இறுதியுடன் நிறைவடைந்தது. இம்மாதம் (மே மாதம்) தொடங்கி அனுப்பப்பட்டப் படைப்புகளில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றவை மட்டும் வல்லினத்தில் பிரசுரமாகும். அவ்வகையில் இம்மாதம் ஒரு கட்டுரை, ஒரு பத்தி இரு சிறுகதைகள் இறுதிச்சுற்றுக்குத் தேர்வு பெறுகின்றன. தொடர்ந்து செப்டம்பர் வரை இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறும் படைப்புகள் வல்லினத்தில் பிரசுரமாகும்.…

அசோகமித்திரன் : எளிமையின் நடை

1993, கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்தபோது என்று ஞாபகம். அப்போதைய வாசிப்பு சற்றே இலக்கில்லாமல் இருந்தது. நானாகத் தேடித் தேடி வாசித்துக் கொண்டிருந்தேன். ராஜேஷ் குமார், சுபா, பிகேபி கதைகளைத் தாண்டி சுஜாதாவுக்கு வந்து பாலகுமாரனில் நிலைகொண்டிருந்த காலகட்டம். தீவிர இலக்கிய வாசிப்பு என்பது அவ்வளவாக இல்லை. யாரைப் படிக்க வேண்டுமென்பதே தெரியாது. அப்போது மதுரைக்கல்லூரியின்…

அசோகமித்திரனின் ‘புலிக்கலைஞன்’- கலைக்கு நேரும் ஒரு சாபக்கேடு கோ.புண்ணியவான்

முதல் முறை குடும்பத்தோடு தமிழ்நாட்டுப் பயணம் மேற்கொள்ளும் முனைப்பில் ஈடுபட்டிருந்தபோது நெஞ்சில்  இனமறியா பதற்றம் ஏறியிருந்தது. அந்நிய நாட்டுப் பயணம் என்பதால் புது இடத்தை, புதிய மனிதர்களை, புதிய கலாச்சாரத்தை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தப் பதற்றம் அது. சென்னையில் யாரும் தெரிந்தவர்கள் இருந்தால் அவர்களை துணைக்கு அழைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் எழுந்தபோது தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவுக்கு வந்த…

கீழடி : சங்ககாலப் பண்பாட்டுப் படுகை (சில குறிப்புகள்)

மதுரையிலிருந்து தென்கிழக்கில் 13 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது கீழடி. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அவ்வூரானது வைகையாற்றின் தென்கரையிலிருந்து சுமார் 3 கிமீ தூரத்தில் அமையப்பெற்றுள்ளது. கீழடியில் உள்ள  ‘பள்ளிச்சந்தை திடல்’ என்னும் பகுதியில் இந்தியத்தொல்லியல் துறையின் பெங்களூரு பிரிவின் ஆறாவது கிளை 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாக மேற்கொண்ட அகழாய்வானது வரலாற்று முக்கியத்துவம்…

ஆக்கத்தின் அசல்தன்மையும் அது தொடர்பான கட்டுக் கதைகளும் (Originality preference & myth)

இணையப் பயன்பாடு கடந்த பத்தாண்டுகளில் தகவல் மூலங்களைக் கண்டறியும் வழிகளையும், பயன்பாட்டையும் மாற்றிவிட்டிருக்கின்றது. தகவல்களை எளிதாக பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டு செல்லுதல், எளிதாகக் கண்டடைந்து பயன்படுத்துதல் என, அடிப்படையில் இவ்விணையப் பயன்பாடு நன்மைகளைக் கொண்டு வருவதாக இருந்தாலும்கூட கற்றலைத் தாமதப்படுத்துதல், ஆய்வுகளில் நேர்மையற்ற தன்மையை உருவாக்குதல் என சில பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி வருவதையும் காண…

இன அரசியலும் மன முடக்கமும்

நேற்று என் அம்மாவை அரசாங்க மருத்துவமனைக்குக் கண் சிகிச்சை பெற அழைத்துச் சென்றேன். இது இரண்டாவது முறை மருத்துவச் சந்திப்பு. கூட்டம் முந்தியடித்துக் கொண்டு நின்றது. காலை 8-மணி சந்திப்புக்கு 6.30-மணியில் இருந்து மக்கள் வந்து காத்திருப்பதாகப் பேசிக்கொண்டார்கள். பெரும்பான்மை மருத்துவமனைகளில், அதிலும் அரசாங்க மருத்துவமனைகளில் இச்சூழல் இயல்புதான் என்பதால் அமைதியாக, தாதிகளின் அழைப்புக்குக் காத்திருந்தோம்.…

திறவுகோல் 7: திரிந்தலையும் திணைகள்

இந்தக் குறுநாவல் சிங்கை எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கரால் எழுதப்பட்டு, சந்தியா பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பட்டு 2012 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் இந்நூலூக்காக நூலாசிரியர் கரிகாலன் விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு வருடங்கள் பள்ளியில் ஒன்றாகப் படித்து, திருமணமான பிறகு வெவ்வேறு நாடுகளில் வாழ நேரிடும் இரண்டு பெண்களின் வாழ்க்கைப் போராட்டம்தான்…

காசி கவிதைகள்

அந்த இரவு இந்த இரவில் அவ்வளவு கறுமையில்லை எங்கிருந்தோ ஒரு மணியின் ஓசை கண்கள்வழி புகுந்து வெளிச்சம் கொடுக்கத்தொடங்கியது தோல்களை உரசிய காற்று இரவைக் கிழித்து காட்சிகளைப் படிமங்களாக்கியது இப்போதுதான் எரியத்தொடங்கிய பிணத்தின் சாம்பல்வாடை இரவுக்குள் கண்களை ஊர்ந்துசெல்ல வைக்கிறது நான் கங்கையைப் பருகியபோது கறுமை தனது ஆடைகளைக் களைந்து இந்த இரவை அத்தனை கருமை…

அற்புதம்

அந்த மூன்றுநாள் கூட்டத்தை ‘குருசெட்’ கூட்டமென்று அழைப்பார்கள். தமிழில் நற்செய்திக் கூட்டமென்றும் சுவிசேஷக் கூட்டமென்றும் சுகமளிக்கும் கூட்டமென்றும் பெயர் பெற்றது. வெள்ளி, சனி, ஞாயிறு மாலையில் தொடங்கி முன்னிரவில் முடிவடையும். இந்த விசேஷக் கூட்டத்திற்காக ஒரு மாதத்திற்கு முன்பே ஆயத்த வேலைகள் செய்யப்படும். மூப்பர் பிரிவில் உள்ளவர்கள்தான் வேலைகளைப் பங்கிட்டுக் கொடுப்பர். சபை காரியங்களில் உற்சாகமாக…

பறத்தலின் நிமித்தம்

பறக்க எத்தனிக்கும் பறவை ஒன்றினை வரைகிறாள் மாயா. நீல நிற பறவை அது. கண்களில் கானகத்தைச் சுமந்தபடி சிறகுகளை விரித்துக் காத்திருக்கிறது. தானியங்களையும் தடாகம் ஒன்றினையும் மரங்களையும் வரைந்து முடித்த அவள் களைத்துப் போய் உறங்கி விட்டாள். தான் பறந்து திரிய ஒரேயொரு வானத்தை வரைந்து விடு என காதருகில் வந்து கெஞ்சி எழுப்புகிறது அந்நீல…

இனி நட்பாய் தொடரட்டும் : ஒரு வாசகப் பார்வை

என் வாசிப்பனுபவத்தில் படைப்பிலக்கியத்தை இரு கூறுகளாகப் பகுத்துப் பார்க்கிறேன். ஒன்று, படிப்பவர்கள் விரும்புவதைப் படைப்பது. மற்றது, படைப்பு படிப்பவர்களை விரும்ப வைப்பது. இவ்விரண்டில் முதலாவது எளிது; இரண்டாவது சற்றே கடினம். இனி ‘நட்பாய் தொடரட்டும்’ எனும் முதல் சிறுகதை நூலின்வழி தனது சிறுகதைகள் அனைத்தும் மிகவும் எளிய முறையில் வாசிப்பவர்களுக்கு எந்தவொரு சிக்கலுமின்றி புரிந்து கொள்ளும்…

உயிர்க்காடு -இறுதி பாகம்

திடுமென ஒலித்த ஒரு காரின் ஹார்ன் சத்தம் அவளை எழுப்பியது. ரோட்டைத் தாண்டி ஓடிய, ஒரு சிறுவிலங்கு அந்த வண்டியிலிருந்து தப்பி, அவள் இருக்கும் குகையை நோக்கிப்புகுந்து மறைந்தது. ‘இன்னும் ஏன் சில்வன் வரவில்லை என்று யோசனையுடன் ஆழ்ந்தாள் மெலிசா. இரவு பத்தரை மணி அளவில், அவளுடைய கைத்தொலைப்பேசிக்குச் செய்தி அனுப்பியிருந்தான் சில்வன். ‘இரவு 4…

படைப்புகளுக்குப் பரிசுத் திட்டம் 2017 – நாள் நீட்டிப்பு

வல்லினம் கடந்த ஆண்டு வெற்றிகரமாக சிறுகதைப் போட்டியை நடத்தி முடித்ததைத் தொடர்ந்து இவ்வருடமும் வல்லினத்தில் பிரசுரமாகும் படைப்புகளுக்கான பரிசுத்திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் வழி சிறுகதை, கட்டுரை, பத்தி ஆகிய மூன்று இலக்கிய வடிவங்களில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு படைப்புக்கு மட்டும் RM 1000.00 ( ஆயிரம்  ரிங்கிட்) பரிசு வழங்க வல்லினம் முடிவெடுத்துள்ளது. சிறந்த சிறுகதை…

வை.கோவிந்தன் : மறக்கப்பட்ட ஆளுமை

தஞ்சாவூரில், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனக் கிளை மேலாளர் சரவணனிடம் பேசிக்கொண்டிருந்த போது “சக்தி கோவிந்தனைத் தெரியுமா?” என்றார். “ஓரளவு கேள்விப்பட்டிருக்கிறேன்” என்று சொன்னேன். “புதுக்கோட்டை அருகில் உள்ள ராயவரம்தான் அவரது சொந்த ஊர்.   அங்கே நடக்கின்ற ஒரு விழாவிற்காக அவரது மனைவியும் மகனும் சென்னையிலிருந்து வந்திருக்கிறார்களாம். சந்திக்கிறீர்களா…” உச்சி வெயில். எதிர் அனல் காற்று.…

வல்லினம் குறுநாவல் பட்டறை & சிங்கப்பூர் இலக்கிய அறிமுகம்

வல்லினம் இவ்வாண்டு குறுநாவல் பட்டறை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் குறுநாவல் பட்டறையைத் தமிழக எழுத்தாளர்கள் ஜெயமோகன் மற்றும் பிரபஞ்சன் ஆகியோர் வழிநடத்துவர். இரண்டு நாள்கள் நடைபெறும் இப்பட்டறையில் மலேசிய சிங்கை எழுத்தாளர்கள் கலந்துகொள்ளலாம். மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழ் குறுநாவல் இலக்கியம் வளர வல்லினம் சில செயல்திட்டங்களை வகுத்துள்ளது. அவ்வகையில் வல்லினம் குறுநாவல் பதிப்புத்திட்டத்திற்காக இந்தப்…

சிங்கப்பூர் வாசகர் வட்ட விழா : ஓர் அனுபவம்

எம்.கே.குமார் தனது ‘5.12 PM’ சிறுகதை நூலுக்கு முன்னுரை கேட்டிருந்தார். அப்படியே அவசியம் சிங்கப்பூர் வாசகர் வட்டம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு நூல் குறித்து பேச வேண்டும் என்றார். நான் முதலில் நூல் குறித்து எழுதிவிடுகிறேன்; பின்னர் வருவது குறித்து பேசுவோம் என்றேன். என்னால் சடங்கான முன்னுரை எழுத முடியாது என்பதை அறிவேன். மலேசியாவில் எனக்கு…

‘உணவும் பண்பாட்டு மெருகேற்றலும்’

முன்னுரை மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முதலிடம் வகிப்பது உணவு. மனித நாகரிகம் பல்வேறு படிநிலைகளைக் கடந்து வந்த சூழலில் உணவுப் பண்பாடும் ஓசையின்றி உடன் வளர்ந்ததை மானிடவியல் ஆய்வுமுடிவுகளின் வாயிலாக அறிகின்றோம். தமிழர்களது முற்கால வரலாற்றை ஆராயும்போது, உணவு உள்ளிட்ட அடிப்படைக்காரணிகள் குறித்தும் உடன் விவரிக்கப்படுகிறது. அந்த அளவிற்கு உணவிற்கான இருப்பு மனித வரலாற்றில் நீக்கமற…

ஒளியும் ஒலியும்

மின்னணு ஊடகம் மங்கள இசை இசைத்து மதுரமழை கொட்டிய காலங்களில்  உண்டான வானவில் ஒளியும் ஒலியும்; சித்ரஹாரையும் சிந்தனையில் இணைத்து மக்கள் ஊடக உலகத்திற்குத் தயாராகியிருந்த தொடக்க காலம்; வெள்ளிக்கிழமையும் ஒளியும் ஒலியும் இணைபிரியாத நண்பர்கள்; மக்களின் குறைகளைக் கேட்பதற்குக் கூடாத கூட்டங்கள் பஞ்சாயத்து டெலிவிஷன் முன் குழுமியிருந்த காலம்; தமிழ்த் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிக் குழந்தைகளின்…

டாக்டர் மா.சண்முகசிவா சிறுகதைகள் : நவீன அழகியலின் முகம்

இலக்கிய விமர்சனம் என்பது மலேசியாவில் மிகச் சிக்கலான ஒரு விடயம். விமர்சனத்தை எதிர்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் போதுமான பக்குவம் மலேசிய இலக்கியச் சூழலில் இல்லை. ஓர் எழுத்தாளனோ அல்லது வாசகனோ ஒரு படைப்பை வாசித்துவிட்டு அதை விமர்சனம் செய்தால் விமர்சனம் செய்தவன் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாவதுதான் இங்கே நிலவும் சூழல். ஓர் இலக்கியப் படைப்பு மீது வைக்கப்படும்…

கோ.புண்ணியவானின் சிறுகதைகள் : எதார்த்தத்தின் முகம்

மலேசிய நவீனத் தமிழ் கலை இலக்கியப் படைப்புலகம் கவிதை சிறுகதை நாவல், நாடகம், கட்டுரைகள் போன்ற பல்வேறு வடிவங்களால் நிறைந்தது.  ஆயினும் சிறுகதை வடிவமே  இங்கே அழுத்தமான இலக்கிய நகர்ச்சியைக் காட்டுகிறது என்று துணிந்து கூறலாம். புதுக்கவிதை பலருக்கும் இலக்கியத் தூண்டல்களை உருவாக்கித் தந்தாலும் அது சிறுபிள்ளை விளையாட்டுப்போல் மெத்தனமாகப் படைக்கப்படுவதாலும் பலகீனமான சொல்லாட்சி, கருத்து…

அரு.சு.ஜீவானந்தன் சிறுகதைகள்: முற்போக்கு அழகியலின் தொடக்கம்

ரசனை விமர்சனம் இறுக்கமான விதிமுறைகளைக் கொண்டதல்ல. அது வாசிப்பை மையப்படுத்துவது. வாசிப்பின் மூலம் ஒரு பிரதிக்கும் வாசகனுக்குமான தொடர்பாடலே ஓர் இலக்கியத்தின் தன்மையை ஆராய்கிறது. ‘வாசிக்கும் அனைவரும் வாசகனா?’ எனக்கேட்டால் இல்லை என்பதே பதில். பல முக்கியமான இலக்கியப்பிரதிகளை வாசித்த நண்பர்கள் எனக்கு உண்டு. ஒரு சிறுகதையை வாசித்து முடித்தபின் அவர்களால் அதில் உள்ள தகவல்களை…