நான் அறிந்த பி.எம்.மூர்த்தி

2008 ஆம் ஆண்டின் இறுதி அது. புருவங்களிலும் மீசையிலும் உரோமம் அடர்ந்திருந்த ஒருவர் நான் வேலை செய்த பள்ளிக்கு வந்திருந்தார். அவர் கையில் அவ்வருட ஆறாம் ஆண்டு மாணவர்களுக்காக நான் தயாரித்த பயிற்சி நூல் (module) இருந்தது. “இதைத் தயாரித்தவர் நீங்களா?” என்றார். “ஆம்” என்றேன். தன்னைத் தேர்வு வாரிய அதிகாரி என அறிமுகம் செய்து…

”விழுமியங்களைக் கேள்விக்கு உட்படுத்துவதும் விழுமிய மீறல்களைக் கவனம் எடுத்துப் பரிசீலிப்பதும் நவீன இலக்கியம்”

உலக இலக்கிய வாசகர்கள் அறிந்து வைத்துள்ள தமிழ் எழுத்தாளர்களில் பெருமாள்முருகன் குறிப்பிடத்தக்கவர். இவரது ஒன்பது நாவல்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் கண்டுள்ளன. போலிஷ், ஜெர்மன், செக் போன்ற உலக மொழிகளிலும் மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் இவரது புனைவுகள் மொழியாக்கம் கண்டு வாசிக்கப்படுகின்றன. எழுத்தாளராக மட்டுமல்லாது கவிஞராகவும் ஆய்வறிஞராகவும் அறியப்படும் பெருமாள்முருகனிடம்…

பாட்டையை உருவாக்கிய முன்னோடி

2016 ஆம் ஆண்டு வாக்கில் எழுத்தாளர் ஜெயமோகன் விதி சமைப்பவர் எனும் கட்டுரையை எழுதியிருந்தார். ஒரு துறைக்குள் தனியொரு மனிதராகத் தளராத ஊக்கத்தால் மாற்றங்களையும் பங்களிப்பையும் கொண்டு வரும் முன்னோடிகளைப் பற்றிய மிக முக்கியமான கட்டுரை அது. அந்தக் கட்டுரையையொட்டி எழுத்தாளர் ம. நவீன் மலேசியாவில் அப்படி விதி சமைப்பவர் எனும் பதத்துக்கு எல்லா வகையிலும்…

செங்குன்னியார் பூசை

மாலையில் ஊர்க்கூட்டம் என்று தெரிந்ததும் பிரகாசு மௌனமாகி விட்டான். அதிகம் பேசாதவன் என்றாலும் வழக்கமாகப் போடும் ‘ம்’ கூட அவனிடமிருந்து வரவில்லை. அதைப் பார்க்கச் சரசம்மாவுக்கு மனதில் கருக்கென்றது. வலியப் பேசினாலும் பதில் இல்லை. கைவேலைகளை ஏனோ தானோவென்று செய்தபடி அவனையே கவனித்துக் கொண்டிருந்தார். தன் பார்வையில் இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பது போல. ஆனால்…

விருப்பம்

“பாக்கறதுக்கு இது கலவை மாதிரியே தெரியலையே மேஸ்திரி. மாரியாத்த கோயில்ல ஊத்தறதுக்கு கூழு கரைச்சி வச்ச மாதிரி இருக்குது. இதை வச்சி எப்படி பூச்சுவேலை செய்வீங்க? சிமெண்ட் வேணாமா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் ஜெயலட்சுமி. அவள் தன் கையில் வைத்திருந்த குச்சியை பக்கத்தில் ஒரு சிறிய தொட்டிக்குள் விட்டுத் துழாவினாள்.  தொட்டியில் வேப்பம்பட்டை, ஈச்சம்பட்டை, கற்றாழை,…

மூர்த்தியும் நானும்

சிறு வயது முதலே நான் ஒரு தனிமை விரும்பி. நட்பு வட்டம் என்று எனக்கு இருக்காது. பள்ளிக்குச் செல்லும் முன் நண்பர்கள் எவருமிலர். பள்ளிக்குச் சென்ற காலத்தில் ஒரு சில தோழர்கள். அவர்களுடன் பள்ளி அளவிலான நட்பு மட்டுமே. ஆசிரியரான பிறகு ஒரு சில ஆசிரிய நண்பர்கள். அவர்களுடனும் பள்ளிக்கூடம், செய்யும் தொழில் என்ற அளவில்தான்…

ஆலவாயன் – அர்த்தநாரி: இரு நாவல்களில் ஒரு பார்வை

குடியானவர்களின் வாழ்க்கை முறையை ஆங்கிலேயர் ஆட்சி காலப் பின்னணியில் சொல்லப்பட்டுள்ள கதை ‘ஆலவாயன்’. காளி, பொன்னா, வல்லாயி, சிராயி, முத்து, வெங்காயி, நல்லையன் என ஒவ்வொருவரும் சேர்ந்து கதையை நகர்த்தியுள்ளார்கள். நாவலின் தொடக்கத்தில் காளியின் தற்கொலை மிரட்டும் தொனியில் துல்லியமாக சித்தரிக்கப்பட்டது போலவே நாவலின் பல பகுதிகளில் சித்தரிப்புகள் ஒரு விதப் பதற்றத்தைக் கொடுக்கக்கூடியவை. காளியின்…

மனங்களின் நகர்வு மாதொருபாகன்

‘மாதொருபாகன்’ நாவல் பிறழ் உறவு கொண்ட மனித மனத்தைக் கூர்மையாக ஆராய்கிறது. பிறழ் உறவு சமூகத்தின் நெறி முறைகள், மரபுகள் மற்றும் எதிர்பார்ப்புகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது. ஒழுக்கம் மற்றும் அறம் சார்ந்த கேள்விகளை எழுப்புகிறது.  எது சரி, எது தவறு என்ற விவாதத்தை உருவாக்குகிறது. இதன் மூலம் நம்மை நாமே நம்முடைய சொந்த நம்பிக்கைகளையும், விழுமியங்களையும் மறுபரிசீலனைச்…

மூர்த்தி எனும் சிறுவன்

‘தொலைந்தது எதுவென்றே தெரியாமல் தேடிக்கொண்டிருக்கிறேன்…’ என்ற யுவனின் இந்தக் கவிதை வரியைத் தொடக்கத்தில் வாசிக்கும்போதெல்லாம் நிலையற்ற தேடலின்மை, இலக்கற்ற வாழ்க்கை, குழப்பமான மனநிலை, மனச்சோர்வு என சில நேரங்களில் எனக்குள் எழும் எண்ணங்களே நினைவில் வருவதுண்டு. எதை தேடிப் பயணிக்கின்றோம், எதை அடைகின்றோம், இதற்கிடையில் எழும் சவால்களைக் கண்டு துவண்டு போகுதல் போன்ற எதிர்மறை எண்ணங்கள்…

தற்காலிக நிழல்

நவீன தமிழர் வாழ்வில் மிகப் பெரிய தக்கத்தை ஏற்படுத்திய ஊடகமாக திரைப்படத்துறை விளங்குகின்றது. மேடை நடகம், தெருக்கூத்து போன்ற கலைகளை அடிப்படையாக கொண்டு தமிழ் திரைப்படத்துறை உருவானாலும், அது தன் கவர்ச்சிகரமான ஈர்ப்பால் அனைத்து தரப்பு மக்களின் செல்வாக்கையும் விரைவில் பெற்று தமிழர் சிந்தனை, பண்பாடு, அரசியல் என பலவற்றிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்தத் துவங்கி…

பெருஞ்செயல்களின் அளிப்பும் ஏற்பும்

நமது வாழ்க்கை நமது செயல்பாடுகளால்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. நல்லதும் அல்லதும் விளைவது நமது செயல்பாடுகளால்தான். இன்று நாம் நம் வாழ்க்கையில் துய்கின்ற பல்வேறான படைப்புகள் அனைத்தும் எங்கோ எப்போதோ யாரோ ஒருவரால் அல்லது கூட்டுச் செயல்களால் உருவாக்கப்பட்டவை என்பதுதான் உண்மை. நல்ல செயல்களால் மனித வாழ்க்கையில் அகம் புறம் என்ற இரு நிலைகளிலும் வளர்ச்சியியும் மேன்மையும்…

நாய், பூனை மற்றும் மனிதன்

எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் ‘வேல்’ சிறுகதைத் தொகுப்பு 2024-இல் வெளியிடப்பட்ட நூலாகும். இத்தொகுப்பில் மொத்தம் 13 சிறுகதைகள் அடங்கியுள்ளன. தொகுப்பில் உள்ள கதைகள் இதற்கு முன்னறே இதழ்களில் வெளியாகி அதன்பின் காலச்சுவடு பதிப்பகத்தின் வழி நூல் வடிவம் பெற்றுள்ளது. இந்தத் தொகுப்பில் உள்ள ஒன்பது கதைகள் ஒரு பொருள் (பாடுபொருள், பாத்திரங்கள், கதை சொல்லும்…

பி. எம். மூர்த்திஎனும்ஆசிரியர்

பி. எம். மூர்த்தி அவர்களை நேர்காணல் செய்யும் வாய்ப்பு வல்லினம் வழியாக அமைந்தது. குறிப்பாக ஒரு பள்ளி ஆசிரியராக அவர் மேற்கொண்ட பயணங்களை அறிந்துகொள்வது ஓர் ஆசிரியரான எனக்கு ஊக்கமூட்டுவதாக இருந்தது. உண்மையில் பி. எம். மூர்த்தி அவர்களின் முதல் பள்ளி அனுபவம் மிகவும் சுவாரசியமானது. அவர் 1984ஆம் ஆண்டு லாடாங் பீயோங் என்ற முதல்…

தழலின் தீண்டல்

“நீங்க அவன மண்ணுளி பாம்புன்னு நினைச்சீங்க. நான் அப்பவே சொன்னேன். அவன நம்பாதீங்க, அவன் பெருமாள் கோவில் கருப்பன்னு. நீங்கதான் கேக்கல. இதோ உங்ககிட்டயே சீறிட்டுப் போறான் இப்ப,” என்று மாமாவிடம் சொல்லிவிட்டு என்னைப் பார்த்துச் சிரித்த கிரிதரனிடம் நான் எதுவும் சொல்லாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். சிறிது நேரம் சிரிப்பிலேயே நிலைத்திருந்த முகத்தில் அவனின் சிறிய…

மத்த யானையின் ஈருரி

“விதண்டாவாதமாகப் பேசுவதை நிறுத்து. இப்படிப் பேசிப் பேசித்தான் எல்லாமே சிக்கலாகிறது. என்னை மடக்கி மடக்கிப் பேசி ‘கிரிட்டிக்கலாக’ அனலைஸ் செய்யாதே,” லலிதா கோபமாகச் சொன்னாள். “என்ன விதண்டாவாதம்? அரை மணிக்கு மேல் கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் சொல்கிறேன்!” “உனக்குத்தான் நான் பேசினால் காது கேட்பதில்லை!” கோபமாக பரந்தபன் கத்தினான். அவள் ஒரு துளி காப்பியை அருந்தினாள்.…

போண்டு – சமூக விலங்குகளின் உளவியல் தொகுப்பு

மனிதன் ஒரு சமூக விலங்கு. மனிதனின் விலங்கியல் இயல்புகளைச் செல்லப்பிராணிகளைக் கொண்டு விவரிக்க இயலும் முயற்சிதான் ‘போண்டு’ சிறுகதை தொகுப்பு. பெருமாள் முருகனின் ‘வேல்’ எனும் சிறுகதை தொகுப்பைத் தொடர்ந்து,  ‘போண்டு’  பதினொன்று சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பாக வெளியாகி உள்ளது. வளர்ப்பு பிராணிகளை முதன்மை கதாபாத்திரமாகக் கொண்டிருந்தாலும் அதை வளர்க்கும் மனித விலங்கினைப் பற்றிய கதைகளாகவே என்னால் இக்கதைகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. மனிதன் என்பவன்…

காலமாற்றங்களின் கதை

கொரோனா காலகட்டத்தைப் பின்புலமாக கொண்ட ‘நெடுநேரம்’ நாவலை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் பெருமாள் முருகன். முந்தைய தலைமுறை மற்றும் இன்றைய தலைமுறை எனும் இரு வேறு காலகட்டத்தில் வாழும் மனிதர்களின் காதலையும் அதன் மாற்றங்களையும், வாழ்வின் யதார்த்தத்தையும் பேசுவதோடு மட்டுமில்லாமல் எல்லா காலகட்டத்திலும் கருப்பு, வெள்ளை என இரண்டும் இணைந்த சாம்பல் நிற அகம் பொருந்திய மனிதர்களை…

அந்த மாவட்டத்தின் டாக்டர்

இலையுதிர் காலத்தில் ஒருநாள் நான் ஓர் உட்புறப் பகுதியில் பயணம் செய்துகொண்டிருந்தபோது எனக்குத் திடீரென்று சளிபிடித்து  உடல் காய்ச்சல் கண்டது. நல்ல வேளையாக அப்போது நான் அவ்வூரின் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன். ஒரு டாக்டரை வரச் சொல்லியிருந்தேன். சொல்லி அரை மணி நேரத்துக்குள் அவர் வந்துவிட்டிருந்தார். ஒல்லியான தேகம், கருமையான தலைமுடி, சராசரி உயரம்…

இளையோர் குறுநாவல் போட்டி – நாள் நீட்டிப்பு

வல்லினம் ஏற்பாடு செய்த குறுநாவல் போட்டியின் கால அளவு நவம்பர் 30 வரை நீட்டிக்கப்படுகிறது. பல கல்லூரி மாணவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் நவம்பர் 30க்குள் உங்கள் குறுநாவலை novelletecontest@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் போட்டி தொடர்பான சந்தேகங்கள், கேள்விகள் இருந்தால் +601123822472 எனும் புலன…